News March 5, 2025

புதுகை: நீதிமன்றத்தில் மாரடைப்பு ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு

image

அறந்தாங்கி மணிவிளான் முதல் தெருவை சேர்ந்த ரஹ்மத்துல்லா (58). இவர் புதுக்கோட்டை நீதித்துறை நடுவர் நீதிமன்றம் இரண்டில் இவர் மீது உள்ள வணிக பொருளாதார குற்ற வழக்கில் ஆஜராகி விட்டு நீதிமன்ற படிக்கட்டுகளில் இறங்கி சென்ற போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து போலீசார் விசாரணை.

Similar News

News November 7, 2025

விராலிமலை: மயங்கி விழுந்த கூலி தொழிலாளி உயிரிழப்பு

image

விராலிமலை கார்கில் நகரைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி ரமேஷ்(36). இவர் கடந்த 4ம் தேதி வீட்டில் இருந்தபோது மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

News November 7, 2025

புதுக்கோட்டை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்!

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கை முடக்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
1.உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
2.ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
3.விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

புதுகை: நெல் மூட்டைகள் அனுப்பும் பணி

image

திருவாரூர் மாவட்டத்திலிருந்து புதுகைக்கு சரக்கு ரயில் மூலம் 42 பெட்டிகளில் வந்த 2 ஆயிரம் மெட்ரிக்டன் நெல் மூட்டைகளை லாரிகள் மூலம் கடையாத்துப்பட்டி மற்றும் துளையானூர் பகுதிகளில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பும் பணி நேற்று நடைபெற்றது. டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி முடிந்து நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை நுகர் பொருள் வாணிபக்கழகத்தின் கிடங்கிற்கு அனுப்பபடுகிறது.

error: Content is protected !!