News March 5, 2025
திருப்பூரில் பிளஸ் 1 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் மேல் நிலை முதலாமாண்டு ( பிளஸ் 1 ) தேர்வுகள் இன்று தொடங்கியது. திருப்பூர் வருவாய் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வினை 92 தேர்வு மையங்களில் 221 மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 27,237 மாணவ மாணவியர்களும், தனித்தேர்வர்களாக 328 மாணவ மாணவிகளும் என 27,565 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர். பொதுத்தேர்வு ஒட்டி பள்ளிகளில் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Similar News
News February 24, 2026
திருப்பூர்: இனி வங்கிக்கு போக வேண்டாம்!

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும். SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) HDFC (7070022222) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News February 24, 2026
காங்கேயம் அருகே விபத்து! சம்பவயிடத்திலேயே பலி

ஈரோடு மாவட்டம், வெள்ளோடு அடுத்த டி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி. இவர் நேற்று காலை அவரது பேட்டரி மொபட்டில் காங்கேயம் நோக்கி சென்றுள்ளார். அப்போது நாட்டார்பாளையம் பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் மொபட்டை ஓட்டி சென்ற முதியவர் குமாரசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
News February 24, 2026
அறிவித்தார் திருப்பூர் கலெக்டர்!

திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே செய்தி குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள அறை எண் 240-ல், வருகிற பிப்ரவரி 28-ம் தேதி காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைகள் மற்றும் விவசாயம் சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். SHAREIT


