News March 5, 2025
பருத்தி உற்பத்தியில் தேனி மாவட்டத்தின் பெருமை

தேனி, தென்னிந்தியாவின் 2வது மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு காரணம், பருத்தி வர்த்தகம், தொழில்துறையின் வளர்ச்சியே ஆகும். தேனியில் மிகவும் மென்மையான, சிறந்த தரமான பருத்தி பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தேனியின் பருத்திகள் கோயம்புத்தூரில் தயாரிக்கப்படும் பருத்தி பொருட்களுக்கு போட்டியாக இருக்கும்.*உங்கள் ஊரின் பெருமையை பிறக்கும் ஷேர் செய்யுங்கள்
Similar News
News January 17, 2026
தேனி: மனைவி மீது பெட்ரோல் குண்டு வீசிய கணவன்

அல்லிநகரம் பகுதியில் வசித்து வருபவர் தெய்வராஜ் (31). இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் (29) கடந்த ஜன. 14ம் தேதி ஏற்பட்ட தகராறில் வீட்டை விட்டு வெளியே வந்த தெய்வராஜ், மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி மூடியில் திரி வைத்து தீ மூட்டி மனைவி கவிதாவை நோக்கி எறிந்துள்ளார். இதில் கவிதா விலகியதால் பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதுகுறித்த புகாரின் பெயரில் தெய்வராஜை அல்லிநகரம் போலீசார் கைது செய்தனர்.
News January 17, 2026
தேனி: பைக் விபத்தில் இளைஞர் பரிதாப பலி

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (21). இவர் நேற்று முன்தினம் (ஜன.15) அவரது பைக்கில் ஆண்டிபட்டியில் இருந்து தேனிக்கு சென்றுள்ளார். பைக் அதிவேகமாக சென்ற நிலையில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வேல்முருகன் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து க.விலக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
News January 16, 2026
தேனி: செல்போன் வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!

மத்திய அரசு ‘சஞ்சார் சாதி’ என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது. மோசடி, தொலைந்து போன அல்லது திருடு போன மொபைல் இணைப்புகளை கண்டறிய, டிஜிட்டல் மோசடி குறித்து இந்த செயலியில் புகார் அளிக்கலாம். இந்த ஆப் மூலம் திருடு போன லட்சக்கணக்கான போன்கள் கண்டுபிடிக்கப்பட்டும், மோசடிகளுக்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலியை இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். SHARE IT


