News March 5, 2025

பிளஸ் 1 தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு

image

பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடங்கி, வரும் 27ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் 3,316 தேர்வு மையங்களில் 8.23 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். மாணவர்கள், பெற்றோர் தங்கள் புகார்கள், சந்தேகங்களை அறிய கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். 9498383075, 9498383075 ஆகிய எண்களில் அழைக்கலாம். ALL THE BEST.

Similar News

News March 6, 2025

வங்கதேச ஸ்டார் வீரர் ஓய்வு அறிவிப்பு

image

வங்கதேச அணியின் கீப்பரும், பேட்ஸ்மேனுமான முஷ்ஃபிகுர் ரஹீம், ODIயில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளார். இந்த 19 ஆண்டுகால கெரியரில் தனக்கு உறுதுணையாக இருந்த ரசிகர்கள், சக வீரர்கள், குடும்பத்தினருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். ODIல் 2006ல் அறிமுகமான இவர், இதுவரை 274 போட்டிகளில் விளையாடி 9 சதம், 49 அரைசதங்களுடன் 7,795 ரன்களை எடுத்துள்ளார். கீப்பராக 243 கேட்ச்கள், 56 ஸ்டம்பிங் செய்துள்ளார்.

News March 6, 2025

நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக வாய்ப்பில்லை: PK

image

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கூட்டணியில் நிதிஷ் குமார் போட்டியிட்டாலும் அவரால் மீண்டும் முதல்வராக முடியாது என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். நிதிஷ் குமாரின் செல்வாக்கு குறைந்து வருவதால், அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க பாஜக தயக்கம் காட்டும் என்றும், இதை தன்னால் எழுதிக்கூட தர முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வருட இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ளது.

News March 6, 2025

வேளாண் பட்ஜெட்: உங்கள் கருத்தை அரசுக்கு பகிரலாம்!

image

வரும் 2025 -26ம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட், 15ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் சேர்க்க வேண்டிய அம்சங்கள், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்குமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது. அதன்படி, மக்கள் தங்கள் கருத்துகளை tnagribudget2025@gmail.com என்ற இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம். ஏற்கெனவே, கடந்த வாரம் வேளாண்துறை சார்ந்த கருத்துகேட்புக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

error: Content is protected !!