News March 5, 2025
பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருக்கம்

மத்திய, மாநில போலீஸ் அதிகாரிகள் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புகளின் ஆதரவாளர்கள் பெருகி வருவது தெரியவந்துள்ளது. அதற்காக, 2.38 கோடி ரூபாயில் சிறப்பு புலனாய்வு பிரிவின் 3 யூனிட்டுகளை தொடங்குவதற்கான பணியில், போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் பயங்கரவாத செயலை முறியடிக்க, கியூ பிரிவு, ஒ.சி.ஐ.யு., ஏ.டி.எஸ்., உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகின்றன.
Similar News
News September 23, 2025
விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று(செப்.23) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 23, 2025
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செப்டம்பர் 23 அன்று மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடந்தது. தவெக, காங்கிரஸ், திமுக, அதிமுக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
News September 23, 2025
தைலாபுரத்தில் பாமக மாவட்ட செயலாளர் கூட்டம்

பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் நடைபெற்றது. பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட தலைவர்கள், மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர்.