News March 4, 2025
221 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை SHOCKING

ஆப்பிரிக்க நாடான சூடானில், கடந்த ஓராண்டில் மட்டும் 221 குழந்தைகள் படையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. அங்கு ராணுவத்துக்கும் துணை ராணுவத்துக்கும் இடையே போர் நடந்துவருகிறது. இதில் இதுவரை 20,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர் 1.4 கோடி மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான குழந்தைகளில் 30% ஆண் குழந்தைகளாவர். போர் என்றால் மனிதமும் மறைந்துவிடுமா?
Similar News
News March 5, 2025
அல்லு அர்ஜுன் -அட்லி படத்தில் 5 ஹீரோயின்கள்?

அல்லு அர்ஜுனை வைத்து அட்லி இயக்க உள்ள புதிய படத்தில், 5 ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஸ்க்ரிப்டின் படி 5 நடிகைகள் தேவைப்படுவதாகவும், அமெரிக்கா, கொரியா உள்ளிட்ட 3 வெளிநாடுகளைச் சேர்ந்த நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், மெயின் ஹீரோயினாக ஜான்வி கபூரும், மற்றொரு இந்திய நடிகையும் நடிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 5, 2025
SHOCKING NEWS: கேன் வாட்டர் குடிக்கிறீர்களா?

மனிதர்களின் மூளையில் ஒரு பிளாஸ்டிக் ஸ்பூன் அளவிற்கு பிளாஸ்டிக் நுண்துகள்கள் இருப்பதாக, கனடா ஆராய்ச்சியாளர்கள் ஷாக் தகவலை பகிர்ந்துள்ளனர். உடலின் மற்ற உறுப்புகளை காட்டிலும், மூளையில் 7-30 மடங்கு அதிகமான நுண்துகள்கள் சேர்வதாகவும் அதிர்ச்சியளிக்கின்றனர். கேன் வாட்டரை தவிர்ப்பது இதற்கு 90% தீர்வாக அமையும் எனவும், பிளாஸ்டிக்கில் வைத்து கொடுக்கப்படும் உணவுகளை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
News March 5, 2025
சாதனையை விட இதுதான் முக்கியம்: கோலி

சாதனை படைப்பதை விட அணி வெல்வதே முக்கியம் என கோலி தெரிவித்துள்ளார். AUSக்கு எதிரான வெற்றிக்கு பின் பேசிய அவர், இந்த போட்டியில் சதம் அடித்திருந்தால் நன்றாகத் தான் இருந்திருக்கும், ஆனால், அதை விட அணி வெல்வதே முக்கியத்துவம் வாய்ந்தது என தெரிவித்துள்ளார். மேலும், சதத்தை தவற விட்டது தனக்கு வருத்தமில்லை எனவும், தனிப்பட்ட சாதனைகளை தான் எப்போதுமே யோசித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.