News March 4, 2025
விருதுநகர் மண்டல இணைப்பதிவாளர் முக்கிய அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உறுப்பினர்களாக உள்ளவர்களில் சிலர் இதுநாள் வரை ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் ஆகிய விபரங்களை வழங்காமல் உள்ளனர். அவர்கள் ஒரு வார காலத்திற்குள் தங்களது ஆதார் எண் மற்றும் குடும்ப அட்டை எண் விவரங்களை தாங்கள் உறுப்பினர்களாக உள்ள கூட்டுறவு சங்கங்கள் வங்கிகளில் உடனே சமர்ப்பிக்க வேண்டும் என மண்டல இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 30, 2025
விருதுநகரில் இலவச முழுமாதிரி தேர்வுகள்

இரண்டாம் நிலைக் காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர், தீயணைப்பாளர் – 3644 பணிக்காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நவ.9 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு இலவச முழுமாதிரித் தேர்வுகள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் நவ.01 அன்று நடைபெற உள்ளதாக ஆட்சியர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
News October 30, 2025
விருதுநகர்: PHONE தொலைந்தால் நோ டென்ஷன்., இதோ தீர்வு

விருதுநகர் மக்களே உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <
News October 30, 2025
விருதுநகர்: ரயில்வேயில் சூப்பர் வேலை அறிவிப்பு., APPLY NOW

விருதுநகர் மக்களே, இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள Clerk உள்ளிட்ட 3058 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 20 – 30 வயதுக்குட்பட்ட 12வது தேர்ச்சி பெற்றவர்கள் இங்கு <


