News March 30, 2024
கடலூரில் காய்கறிகள் மூலம் விழிப்புணர்வு

பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19-ந் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி கடலூர் பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர்கள் இன்று காய்கறிகள் மூலம் கோலம் போட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இதனை கலெக்டர் அருண்தம்புராஜ், கோட்டாட்சியர் அபிநயா, மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி ஆகியோர் பார்வையிட்டனர்.
Similar News
News September 19, 2025
கடலூர்: எச்.ஐ.வி. நோய் குறித்து விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கடலூர் டவுன்ஹால் அருகே எச்.ஐ.வி /எய்ட்ஸ் பால்வினை நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் இன்று விழிப்புணர்வு உறுதி மொழியினை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். உடன் இணை இயக்குநர் (நலப்பணிகள்) மணிமேகலை, துணை இயக்குநர் (காசநோய்) கருணாகரன் உள்பட பலர் உள்ளனர்.
News September 19, 2025
வடலூர்: கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பொருட்கள் வழங்கல்

கடலூர் மாவட்டம், வடலூர் நகராட்சிக்கு உட்பட்ட 16 மற்றும் 17 ஆகிய வார்டு பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் முகாம் வடலூர் தனியார் மண்டபத்தில் இன்று காலை துவங்கியது. முகாமை மாவட்ட கல்வி குழு தலைவர் பொறியாளர் வி. சிவக்குமார் துவக்கி வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகமும், மக்களை தேடி மருத்துவ பயனாளிகளுக்கு மருந்து பெட்டகமும் வழங்கினார்.
News September 19, 2025
கடலூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல்!

கடலூர் மக்களே, தற்போது தமிழகத்தில் மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், சளி, இருமல் மற்றும் வைரஸ் காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உங்களுக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால், உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு ‘104’ என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து உங்களுக்கு அறிவுரைகள் வழங்கப்படும். இந்த தகவலை SHARE செய்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்க!