News March 4, 2025
கிரிக்கெட் வீரர் பாலியல் டார்ச்சர் – இளம்பெண் பரபரப்பு புகார்

கோவையை சேர்ந்த 25 வயது இளம்பெண் ஒருவர் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றினை அளித்தார். அதில், “எனக்கும், கோவை டிஎன்பிஎல் கிரிக்கெட் வீரருக்கும் திருமணம் நடந்தது. கணவர் மது போதையில் தாய் வீட்டிற்கு சென்று பணம், நகை வாங்கி வர கூறி என்னை கிரிக்கெட் பேட்டால் அடித்தார்.என் கணவரும், அவர் தாயும் என்னை உடல், மன ரீதியாக துன்புறுத்தி வருகிறார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளார்.
Similar News
News August 4, 2025
ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம்!

கோவையில் நேற்று ஒரே நாளில் 5 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக, கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் இன்று தெரிவித்துள்ளார். மாநகர் பகுதிகளில் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்ததாக, மதன் கண்ணன், அறிவழகன், கோபிநாத், அருண் குமார், சுஜி மோகன் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
News August 4, 2025
கோவை: இன்றைய இரவு ரோந்து போலீசார் விவரம்!

கோவை மாவட்டத்தில் இன்று (04.08.2025) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News August 4, 2025
கோவை: ரூ.1.5 லட்சம் சம்பளத்தில் அரசு வேலை!

கோவை மக்களே, தமிழக அரசின் நான் முதல்வன் மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் பணிபுரிய ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 126 காலிப்பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சம்பளமாக ரூ.20,000 முதல் ரூ.1.5 லட்சம் வரை வழங்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பனிக்க இங்கு <