News March 4, 2025
வைகுண்டர் வழி நடந்து மனிதம் காப்போம்: CM ஸ்டாலின்

அய்யா வைகுண்டரின் 193வது அவதார தினத்தையொட்டி, CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆதிக்க நெறிகளுக்கும், சாதியக் கொடுமைகளுக்கும் எதிராக போராடியவர் என்றும், ‘எளியாரைக் கண்டு இரங்கியிரு மகனே, வலியாரைக் கண்டு மகிழாதே மகனே’ என அவர் போதித்துச்சென்ற வழி நடந்து மனிதம் காப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதையொட்டி, நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
போலீஸில் புகாரளித்த பாடகி சின்மயி!

கிளப்ஹவுஸ் செயலியில் உரையாடிக்கொண்டிருந்த போது பாடகி சின்மயியின் குழந்தைகள் இறக்க வேண்டும் என சிலர் பேசியது பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்நிலையில், தனது குழந்தைகளுக்கு எதிராக சிலர் வெறுப்பை பரப்பி வருவதாக ஹைதராபாத் காவல் ஆணையர் வி.சி.சஜ்ஜனாரிடம் சின்மயி X-ல் புகாரளித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாக சைபர் குற்றப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
News November 7, 2025
மோதல் போக்கு இருந்தால் நிதி வராது: நயினார்

தமிழகத்திற்கு தேவையான நிதியை தராமல் மத்திய அரசு வஞ்சிப்பதாக திமுக தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது. இந்நிலையில், மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்தால் நிதி வராது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதனால் மக்களுக்கு நன்மை இல்லை என்று கூறிய அவர், மத்திய – மாநில அரசுகளின் உறவு நன்றாக இருந்தால் தான் மத்திய அரசின் நிதி இங்கு வரும் என்றும் குறிப்பிட்டுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News November 7, 2025
சற்றுமுன்: பிரபல நடிகை மாரடைப்பால் காலமானார்

பிரபல பாலிவுட் நடிகையும், பாடகியுமான சுலக்ஷனா பண்டிட்(71) மாரடைப்பால் காலமானார். 9 வயதில் மழலை குரலில் பாட தொடங்கியவர், பிறகு பாலிவுட் ரசிகர்களை தனது குரலால் கட்டிப்போட்டார். பாடகியாக மட்டுமின்றி, 1970 முதல் 1980-களில் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களான ராஜேஷ் கன்னா, வினோத் கண்ணா, சசி கபூர் போன்றோரின் படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். அவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


