News March 4, 2025
வெளியூர் செல்வோருக்கு திருச்சி காவல் துறையினர் எச்சரிக்கை!

வீட்டை பூட்டிவிட்டு நீண்ட நாட்கள் வெளியூர் செல்லுவோர் குறித்து காவல்துறை முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் வெளியே செல்வோர் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கவும். பணம், நகை போன்ற பொருட்களை வங்கி லாக்கரில் வைத்துவிட்டு செல்வது பாதுகாப்பானது. சாவியை வீட்டில் உள்ள இடங்களிலேயே வைத்துவிட்டு செல்வதை தவிர்க்கவும் என்று பொது மக்களுக்கு காவல் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News October 14, 2025
திருச்சி: புதிய ரயில்வே கூடுதல் பொதுமேலாளர் பதவி ஏற்பு

திருச்சி தெற்கு ரயில்வே கூடுதல் பொதுமேலாளராக விபின்குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நாட்டின் பல்வேறு ரயில்வே மண்டலங்கள் மற்றும் உள்கட்டமைப்பு களங்களில் 1988ம் ஆண்டு முதல் சிறப்பாக பணியாற்றி வந்த விபின்குமார், சிறப்பான நிர்வாகத்தை மேற்கொள்வார் என தெற்கு ரயில்வே நிர்வாகம் விடுத்துள்ள குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News October 13, 2025
திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சமயபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயந்தி என்பவர் பட்டியல் இன மக்களுக்கான சலுகைகளை பெறுவதற்காக, போலியான ஆவணங்களை தயாரித்து, அதை பயன்படுத்தி தேர்தலில் போட்டியிட்டதாக அவர் மீது சமயபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதியப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்த விசாரணை இன்று திருச்சி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் ஜெயந்திக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதமும் விதித்து நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
News October 13, 2025
திருச்சி: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

திருச்சி மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம்.<