News March 4, 2025
இந்தியாவின் சிறந்த நகரத்திற்கான விருதை பெற்ற தஞ்சை மாநகராட்சி

தஞ்சாவூர் மாநகராட்சி 2024ஆம் ஆண்டுக்கான சிட்டி 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் நம்பர் 1 நகரம் என்ற விருதை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சையை தூய்மையாக மாற்றுவதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒப்பந்தம் நேற்று ஜெய்ப்பூரில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
Similar News
News September 17, 2025
நீரில்மூழ்கி இளைஞர் உயிரிழப்பு; போலீசார் விசாரணை

பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம், காந்திநகரை சேர்ந்தவர் ஜெயகாந்தன்(24). இவர் தனது தாத்தா சுந்தர்ராஜ் உடன் கருங்குளம் நசுவினி ஆற்றில் குளித்துள்ளார். அப்போது ஜெயகாந்தன் ஆற்றின் ஆழத்தில் சிக்கிக் மூச்சு திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் மீட்கப்பட்டு பட்டுக்கோட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
News September 17, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்று (செப்டம்பர 16) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News September 16, 2025
தஞ்சை மக்களே.. நீங்களும் சொந்த தொழில் தொடங்கலாம்!

தஞ்சையில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் சொந்தமாக தொழில் தொடங்க தமிழகத்தில் UYEGP என்ற சூப்பரான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதன் மூலம் சொந்தமாக தொழில் தொடங்க ரூ.5,00,000-ரூ.15,00,000 வரை 25% மானியத்தில் கடன் வழங்கப்படுகிறது. இதற்கு 8th தேர்ச்சி பெற்று, 18 வயது பூர்த்தியடைந்தால் போதும். இங்கு கிளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இதனை LIKE ஸ்செய்து அனைவருக்கும் SHARE பண்ணுங்க. நீங்களும் தொழிலதிபர் ஆகுங்க!