News March 4, 2025

இந்தியாவின் சிறந்த நகரத்திற்கான விருதை பெற்ற தஞ்சை மாநகராட்சி

image

தஞ்சாவூர் மாநகராட்சி 2024ஆம் ஆண்டுக்கான சிட்டி 2.0 என்ற திட்டத்தின் கீழ் இந்தியாவின் நம்பர் 1 நகரம் என்ற விருதை பெற்றுள்ளது. அதனைத் தொடர்ந்து தஞ்சையை தூய்மையாக மாற்றுவதற்காக ரூ.150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட ஒப்பந்தம் நேற்று ஜெய்ப்பூரில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

Similar News

News November 7, 2025

தெரு நாய் கடித்து 50 நாட்டுகோழிகள் உயிரிப்பு

image

கும்பகோணம் விவேகானந்தர் நகரைச் சேர்ந்தவர் கார்த்திக் இவரது வீட்டின் தோட்டத்தில் நாட்டுக்கோழிகளை வளர்த்த நிலையில், நேற்று இரவு இவரது வீட்டின் தோட்டத்திற்கு புகுந்த தெரு நாய்கள் அங்கிருந்த நாட்டுக் கோழிகளைக் கடித்து குதறின. இதில் 50க்கும் மேற்பட்ட நாட்டுக் கோழிகள் உயிரிழந்தன. இதனால் அதிர்ச்சி அடைந்த உரிமையாளர் இறந்த கோழிகளை கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகர்களிடம் காண்பித்து வேதனை அடைந்தார்

News November 7, 2025

தஞ்சை: வங்கி கணக்கை பாதுகாக்க இது முக்கியம்

image

உங்க வங்கி மறு KYC தேவை என உங்களுக்கு அறிவித்ததா? அப்போ, உங்கள் வங்கி கணக்கு முடங்காமல், செயல்பாட்டில் வைத்திருக்க உங்கள் KYC-ஐ புதுப்பிக்கவும்.
KYC எப்படி புதுப்பிப்பது:
*உங்கள் அருகிலுள்ள வங்கி கிளைக்கோ / கிராம பஞ்சாயத்து முகாமிற்கோ செல்லவும்.
*ஆதார், வோட்டர் ஐடி, 100நாள் வேலை அட்டை கொண்டு செல்லவும்.
*விவரங்களில் எந்தவிதமான மாற்றமும் இல்லையெனில் சுய அறிக்கை (Self-declaration) போதும். SHARE IT

News November 7, 2025

தஞ்சை: வாக்காளர் சிறப்பு தீவிர‌ திருத்த ஆய்வு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான‌ ப்ரியங்கா பங்கஜம் தலைமையில் வாக்காளர் சிறப்பு தீவிர‌ திருத்தம் கணக்கெடுப்பு பணிகள் தொடர்பாக வாக்குச்சாவடி மேற்பார்வையாளர்களுடன் ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் வருவாய் கோட்டாட்சியர் நித்யா, வட்டாட்சியர் சிவக்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!