News March 4, 2025

60% போக்சோ வழக்குகள் நிலுவையில்.. ராமதாஸ் சாடல்

image

60% போக்சோ வழக்குகள் இன்னும் விசாரிக்கப்படாமல் கோர்ட்டில் நிலுவையில் இருப்பதாக ராமதாஸ் விமர்சித்துள்ளார். 2015-22 வரை 21,672 போக்சோ வழக்குகள் பதிவானதாகவும், அதில் 30% போதிய ஆதாரங்கள் இல்லை என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஓராண்டுக்குள் தீர்க்கப்பட வேண்டிய இவ்வழக்குகள், இன்று வரை தேங்கி இருப்பதற்கு TN அரசு பொறுப்பேற்க வேண்டும் எனவும் சாடியுள்ளார்.

Similar News

News October 24, 2025

புயல்களுக்கு பெயர் வைப்பது ஏன் தெரியுமா?

image

புயல்களுக்கு பெயர் சூட்டும் வழக்கத்தை தொடங்கியவர் பிரிட்டன் வானியல் விஞ்ஞானி கிளெமென்ட் ராக். ஒரே நேரத்தில் பல்வேறு பகுதியில் புயல்கள் உருவாகலாம். குழப்பம் வரக்கூடாது என்பதற்காகவே புயல்களுக்கு பெயரிடப்படுகிறது. புயலின் பெயரில் அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது. புயலின் பெயர் 8 எழுத்துகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் போன்ற விதிமுறைகள் உள்ளன.

News October 24, 2025

BREAKING: தங்கம் விலை மளமளவென குறைந்தது

image

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று மளமளவென சரிந்துள்ளது. காலையில் ₹320 அதிகரித்த நிலையில், மாலையில் ₹1,120 குறைந்துள்ளது. சென்னையில் தற்போது 22 காரட் தங்கம் 1 கிராம் ₹11,400-க்கும், 1 சவரன் ₹91,200-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஒரு வாரத்தில் தங்கம் விலை சவரனுக்கு ₹6,400 குறைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

News October 24, 2025

PAK-க்கு ஆப்பு: இந்தியாவை பின்பற்றும் ஆப்கன்

image

பாகிஸ்தான் விவகாரத்தில் இந்தியாவைப் போல ஆப்கனும் தனது நீர்வளத்தை ஆயுதமாக பயன்படுத்த உள்ளது. தங்களது நாட்டில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் குனார் ஆற்றின் நடுவே அணைகளை கட்ட உள்ளதாக ஆப்கன் அறிவித்துள்ளது. இதனால் பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா பகுதியின் பாசனம், குடிநீர் மற்றும் நீர் மின் உற்பத்தி கேள்விக்குறியாகும். பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு இந்தியா சிந்து நதிநீரை நிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!