News March 4, 2025
ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 18, 2025
பிறப்பு மட்டுமே இல்லாத ஒரு போர்வீரன்!

‘ரத்தத்தை கொடுங்கள்.. நான் விடுதலை பெற்றுக் கொடுக்கிறேன்’ என முழக்கமிட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் உலகின் கண்களில் இருந்து மறைந்த தினம் இன்று. அவரால் ஈர்க்கப்பட்டு பல இளைஞர்கள் இந்திய தேசிய ராணுவத்தில்(INA) இணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடினர். ஆகஸ்ட் 18, 1945-ல் தைவானில் விமான விபத்தில் நேதாஜி மரணமடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டாலும், இன்றும் அவரின் மரணத்தில் மர்மம் நீடிக்கிறது.
News August 18, 2025
துணை ஜனாதிபதி தேர்தல்.. திமுகவுக்கு புதிய நெருக்கடி

NDA கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளரான சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுடன் தொலைபேசி வாயிலாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். தமிழகத்தை சேர்ந்தவருக்கு உங்களின் ஆதரவு இருக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். CPR-க்கு எதிரான நிலைப்பாடு எடுத்தால், தமிழரை திமுக புறக்கணித்து விட்டதாக சட்டப்பேரவைத் தேர்தலின்போது NDA பரப்புரை செய்ய வாய்ப்புள்ளது.
News August 18, 2025
Way2News விநாடி வினா கேள்வி பதில்கள்

1. சூரியக் குடும்பத்தின் மையத்தை கண்டிபிடித்தவர் யார்?
2. சங்க இலக்கியங்களில் வரலாற்றுச் செய்திகளை அதிகமாக கூறும் நூல் எது?
3. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் சிக்கிய ஆண்டு எது?
4. ‘சரிகமபதநிச’ என்ற ஸ்வர வரிசை எந்த ராகத்தை குறிக்கிறது?
5. அழகான பெண்ணுக்கு அதிசய வியாதி, பாதிநாள் குறைவாள், பாதிநாள் வளர்வாள்.. அவள் யார்?
பதில்கள் மதியம் 12:30 மணிக்கு Way2News-ல் வெளியாகும்.