News March 4, 2025
ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 4, 2025
நம்மூரில் இந்த காண்டம் ஃபிளேவருக்கு தான் கிராக்கி!

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு டேஸ்ட் அல்லவா! நம் ஊர் மக்களுக்கு இதுலயும் வடஇந்தியர்களின் டேஸ்டுடன் செட்டாகவில்லை. Manforce கம்பெனியின் நிறுவனர் அளித்த பேட்டியில், தென்னிந்திய மக்கள் அதிகளவில் மணக்கும் மல்லிப்பூ காண்டம் ஃபிளேவரை தான் லைக் பண்றாங்களாம். அதே நேரத்தில், நாட்டின் ஒரு இடத்தில் மட்டும் பான் ஃபிளேவர் காண்டமுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கிறதாம். இதுலயும் பான்! எந்த ஊரா இருக்கும்?
News March 4, 2025
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்க உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அரசின் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, தமாக, நாதக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News March 4, 2025
CA தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி மாதம் நடந்த CA அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 533 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 21.52% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்திய அளவில் ஐதராபாத் மாணவி முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். முடிவுகளை <