News March 4, 2025
மார்ச் 4: வரலாற்றில் இன்று

*1924 – தமிழ் தேசிய போராளி புலவர் கு. கலியபெருமாள் பிறந்தநாள். *1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் உப்பை பயன்படுத்தவும் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் – மகாத்மா காந்தி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. *1938 – விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள். *தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.
Similar News
News March 4, 2025
அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்பு!

நாளை நடைபெறவுள்ள அனைத்துக்கட்சி கூட்டத்தில் தவெக பங்கேற்க உள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக அரசின் இந்த அனைத்துக்கட்சி கூட்டத்தை பாஜக, தமாக, நாதக ஆகிய கட்சிகள் புறக்கணித்துள்ளது கவனிக்கத்தக்கது.
News March 4, 2025
CA தேர்வு முடிவுகள் வெளியீடு

ஜனவரி மாதம் நடந்த CA அடிப்படைத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. நாடு முழுவதும் 533 நகரங்களில் நடைபெற்ற இத்தேர்வில் 21.52% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 1,10,887 மாணவர்கள் பங்கேற்ற நிலையில், 23,861 மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இந்திய அளவில் ஐதராபாத் மாணவி முதலிடத்தையும், விஜயவாடா மாணவர் 2வது இடத்தையும் பிடித்துள்ளனர். முடிவுகளை <
News March 4, 2025
அறநெறி வளர்த்தவர் அய்யா வைகுண்டர்: அண்ணாமலை

அய்யா வைகுண்டரின் 193ஆவது அவதார தினத்தையொட்டி பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். சாதி, மத வேறுபாடின்றி அனைவருக்கும் பொதுவானவர் அய்யா வைகுண்டர் என குறிப்பிட்டுள்ள அவர், மக்களிடம் சமத்துவம், சமூகநீதி, சுயமரியாதை, தர்மம் போன்ற அறநெறிகள் வளர்த்தவர் அய்யா வைகுண்டர் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.