News March 4, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 196 ▶குறள்: பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். ▶பொருள்: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.
Similar News
News March 4, 2025
அவதூறு பரப்புவது ஏன்? ரஷ்மிகா தரப்பு கேள்வி

கர்நாடகத்தை புறக்கணிப்பதாக காங்., MLA ரவிக்குமார் கவுடா குற்றச்சாட்டை ரஷ்மிகா தரப்பு மறுத்துள்ளது. கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க ரஷ்மிகாவுக்கு அழைப்பு விடுத்தும், அவர் கலந்துகொள்ளவில்லை என எம்எல்ஏ குற்றஞ்சாட்டியிருந்தார். உண்மைக்கு புறம்பான இதுபோன்ற அவதூறுகளை நிறுத்துமாறும், தங்களுக்கு எவ்வித அழைப்பும் விடுக்கப்படவில்லை என்றும் ரஷ்மிகா தரப்பு விளக்கமளித்துள்ளது.
News March 4, 2025
BREAKING: மகாராஷ்டிரா அமைச்சர் முண்டே ராஜினாமா

மகாராஷ்டிரா உணவுத்துறை அமைச்சர் தனஞ்செய் முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீட் மாவட்டத்தில் கடந்த டிச. மாதம் பஞ்சாயத்து தலைவர் சந்தோஷ் தேஷ்முக் படுகொலை செய்யப்பட்டார். இதில், அமைச்சருக்கும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வந்தன. இந்நிலையில், இந்த வழக்கில் அமைச்சரின் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். அதனைத் தொடர்ந்து NCPயை சேர்ந்த முண்டே தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
News March 4, 2025
மீண்டும் ஹாஸ்பிடல் விரைந்த முதல்வர் ஸ்டாலின்!

மூச்சுத் திணறல் காரணமாக சென்னை அப்பல்லோ ஹாஸ்பிடலில் சிகிச்சையில் உள்ள தாயார் தயாளு அம்மாளை சந்திக்க முதல்வர் ஸ்டாலின் மீண்டும் விரைந்துள்ளார். நாகையிலிருந்து நள்ளிரவில் சென்னை திரும்பிய அவர், நேராக ஹாஸ்பிடல் சென்று தயாளு அம்மாளை சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். காலையில், மு.க.அழகிரி உள்ளிட்டோரும் சந்தித்த நிலையில், தற்போது 2ஆவது முறையாக முதல்வர் ஸ்டாலின் ஹாஸ்பிடல் விரைந்துள்ளார்.