News March 4, 2025

ராமஜெயம் கொலை வழக்கு: ஐகோர்ட் முக்கிய உத்தரவு

image

அமைச்சர் கே.என். நேருவின் தம்பியான ராமஜெயம் கொலை வழக்கானது, சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ஜெயக்குமார், திருவாரூர் எஸ்.பி.யாக மாற்றப்பட்டதால் இவ்வழக்கில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்ட நீதிபதிகள், ஜெயக்குமாருக்கு பதிலாக திருச்சி சரக டிஐஜி மற்றும் தஞ்சை எஸ்.பி.யை நியமித்து உத்தரவிட்டனர்.

Similar News

News March 4, 2025

கிட்னியில் கல் எப்படி உருவாகிறது தெரியுமா?

image

சிறுநீரில் உள்ள சில ரசாயனங்கள் வெளியே செல்வதற்குப் பதிலாக உடலில் தங்கி, அவை படிமங்களாக மாறி பின்னர் கற்களாக மாறுகின்றன. மேலும், அசைவம் அதிகமாக சாப்பிட்டு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணத்தினாலும் கல் உண்டாகலாம். அத்துடன் தூக்கமின்மை, லேட்டாக சாப்பிடுவது, வைட்டமின் B6, C, D குறைபாடுகளுடன் உடல் பருமன் இருப்பவர்களுக்கும் கிட்னியில் கல் ஏற்படுகிறது. அதிகமாக தண்ணீர் குடியுங்கள்!

News March 4, 2025

இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு உயர்வு

image

கடந்த 2014ல் ₹35 லட்சம் கோடியாக இருந்த இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு, 2024 இறுதியில் ₹82 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. அந்த காலக்கட்டத்தில், ஆண்டுக்கு 8.90% சராசரி வளர்ச்சி பெற்றிருப்பதாகவும் சில்லரை வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது, வருங்காலங்களில் மேலும் வேகமாக உயரும் என்றும், 2034ம் ஆண்டுக்குள் இந்திய சில்லரை வணிக சந்தை மதிப்பு ₹1.90 லட்சம் கோடியை எட்டும் எனவும் கணித்துள்ளது.

News March 4, 2025

பஸ் மீது லாரி மோதியதில் 31 பேர் பலி

image

பொலிவியா நாட்டின் லா பாஸ் அருகே, பஸ் மீது லாரி மோதிய விபத்தில் 31 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரி மோதிய வேகத்தில், சுமார் 500 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்தது. இதில், படுகாயமடைந்த 22 பேர் ஹாஸ்பிட்டலில் உள்ளனர். இந்த கோர விபத்திற்கு காரணமான லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலிவியாவின் சுக்ரேவில் இரு பஸ்கள் மோதிக்கொண்ட விபத்தில் 37 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!