News March 3, 2025
படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் வருகை

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி செருதூர் வெள்ளாறு பாலம் அருகில் படகு சவாரி குறித்து சுற்றுலாத்துறை அமைச்சர் நாளை (04.03.2025) காலை 07.45 மணி அளவில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனைத் தொடர்ந்து, பிரதாபராமபுரம் மற்றும் பூவைத்தேடி கடற்கரையில் சுற்றுச்சூழல் மற்றும் கிராமப்புற சுற்றுலா திட்டம் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். என்பதனை மாவட்ட ஆட்சியர் தகவல் அறிக்கையில் தெரிவித்தார்.
Similar News
News January 14, 2026
நாகை: மயங்கி விழுந்த பள்ளி மாணவன் சாவு

பாலக்குறிச்சியை சேர்ந்த யுவராஜா மகன் தரணிகுமார் (17). தகட்டூர் அரசுப் பள்ளியில் +2 படித்து வந்த தரணிகுமார் நேற்று காலை வழக்கம்போல குளித்து விட்டு பள்ளிக்கு செல்வதற்காக சீருடை அணிந்துள்ளார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மாணவனை மருத்துவமனை அழைத்து சென்ற போது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 14, 2026
நாகை; வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு

நாகை மக்களே, வாட்ஸ்ஆப் மூலமாக பான் கார்டு பெற்று கொள்ளும் சிறப்பு அம்சத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முதலில் உங்களது WhatsApp-ல் இருந்து ‘90131 51515’ என்ற எண்ணுக்கு ‘HI’ என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு ஆதார் எண்ணை பதிவு பதிவிட்டு, PAN Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும், உங்க பான்கார்டு Whatsapp-ல் அனுப்பி வைக்கப்படும். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News January 14, 2026
நாகை: ரயில் சேவை வழக்கம் போல இயங்கும்!

இரயில்வே தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஜன.14-ம் தேதி, பகுதி அளவு நிறுத்தப்படுவதாக இருந்த திருச்சி – நாகை – காரைக்கால் டெமு ரயில் மற்றும் காரைக்கால்- நாகை – திருச்சி டெமு ரயில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வழக்கம் போல இயங்கும் என தென்னக ரயில்வே பொதுமேலாளர் அலுவலக மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்துள்ளார்.


