News March 3, 2025
புகைப் பழக்கம் இல்லையா? 6 நாள் லீவு

ஆபிஸ் டென்ஷன், ஒரு தம் போட்டு வரலாம் என பிரேக் எடுப்பவர்கள் அதிகம்! இப்படி நேர விரயம் செய்வதை தடுக்க டோக்கியோவில் இயங்கும் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது. புகை பழக்கம் இல்லாதவர்களுக்கு ஆண்டுதோறும் கூடுதலாக 6 நாட்கள் ஊதியத்துடன் விடுப்பு அளிப்பதுதான் அது. இதனால், அலுவலக நேரத்தில் ஊழியர்கள் புகை பிடிப்பதை குறைக்கலாம் என்பது நிறுவனத்தின் எண்ணம். இதுபற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
Similar News
News March 4, 2025
ஃபைனல் செல்லுமா இந்தியா?

இந்தியா- ஆஸி. அணிகளுக்கு இடையிலான CT தொடரின் அரையிறுதிப் போட்டி இன்று நடைபெற உள்ளது. மதியம் 2.30 மணிக்கு துபாயில் போட்டி தொடங்குகிறது. உலகக்கோப்பையில் தோல்வியை பரிசளித்த ஆஸி.யை பழிதீர்க்க இந்தியா எதிர்பார்த்து இருக்கிறது. அதேபோல், இந்த போட்டியை வென்று, ஃபைனலுக்குச் செல்ல ஆஸி. அணியும் முனைப்பு காட்டுகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்றைய போட்டி நடைபெற உள்ளது.
News March 4, 2025
ஆரியர்கள் ஆசிரியர்களைப் போன்றவர்கள்: ஆளுநர்

ஆரியர்கள் வந்தேறிகள் என்ற நச்சு கருத்தை ஈவெரா திணிக்க முயற்சித்ததாக ஆளுநர் ரவி குற்றஞ்சாட்டியுள்ளார். ஆரியர்கள் என்பவர் ஆசிரியர்களை போன்றவர்கள் என்றும், கற்பிப்பதில் தலைசிறந்தவர்கள் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், சிந்து சமவெளி நாகரிகம் என்று சொல்லாமல், சிந்து சரஸ்வதி நாகரிகம் என்று சொல்ல வேண்டும் எனவும், அது அமைதி, ஒற்றுமையை வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
News March 4, 2025
மார்ச் 4: வரலாற்றில் இன்று

*1924 – தமிழ் தேசிய போராளி புலவர் கு. கலியபெருமாள் பிறந்தநாள். *1931 – இந்தியாவில் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும் மக்கள் உப்பை பயன்படுத்தவும் பிரிட்டிஷ் ஆளுநர் எட்வர்ட் வூட் – மகாத்மா காந்தி இடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. *1938 – விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பிறந்தநாள். *தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்.