News March 3, 2025

விழுப்புரத்தில் நாளை விடுமுறை

image

மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயில் திருவிழா நாளை நடைபெறுவதை முன்னிட்டு மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், மத்திய அரசு அலுவலகங்கள் மட்டும் குறிப்பாக வங்கி, தபால் நிலையங்கள் மட்டும் இயங்கும். மற்ற அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Similar News

News November 4, 2025

விழுப்புரம்: நீரில் மூழ்கி சிறுவன் பலி!

image

விழுப்புரத்தைச் சோ்ந்த சிறுவன் தனது நண்பா்களுடன் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். விழுப்புரம் பானாம்பட்டு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த விமல் என்பவரின் மகன் சுஜித் (14). விழுப்புரத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா் . அணைக்கட்டு பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

News November 4, 2025

விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

News November 3, 2025

விழுப்புரம்: தவெக தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

image

விழுப்புரம் மாவட்டம், தவெக தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணியில் புதிய நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் இன்று(நவ.03) மாலை அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளராக வடிவேல், அமைப்பாளராக பிரித்திவிராஜ், இணை அமைப்பாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!