News March 3, 2025
தூத்துக்குடி இளைஞர்களுக்கு வாய்ப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் முன்னணி நிறுவனங்களில் ஊக்கத் தொகையுடன் பாரத பிரதமரின் இன்டர்ன்ஷீப் தொழில் பயிற்சி பெறுவதற்கான வேலை வாய்ப்பு பதிவு செய்யும் முகாம் இம்மாதம் 5 ஆம் தேதி நடைபெற உள்ளது. கோரம்பள்ளத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெறும் இந்த முகாமை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடிஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.*நண்பர்களுக்கு பகிரவும்*
Similar News
News December 24, 2025
தூத்துக்குடி போலீசாருக்கு கொலை மிரட்டல்; 4 பேர் கைது

தாளமுத்து நகர் எஸ்ஐ முத்துராஜா தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த சந்தேகத்துக்கிடமான 4 பேர் கொண்ட கும்பல் போலீசாருக்கு கொலை மிரட்டல் விடுத்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மிரட்டல் விடுத்த விக்னேஷ், முத்து கணேஷ், கண்ணன், ரமேஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News December 24, 2025
தூத்துக்குடி: உங்களது Certificate-ஐ உடனே பெறுவது இனி ஈஸி!

தூத்துக்குடி மக்களே; 10th, 12th, Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிமையக பெற E-பெட்டகம் என்ற இணையதளத்தில் உங்கள் ஆதார் எண்ணை கொடுத்து OTP சரிபார்த்து உள்ள சென்றால் போதும். உங்களுக்கு தேவையான 10th, 12th கல்லூரி சான்றிதழ் முதல் பிறப்பு, வருமானம் போன்ற அனைத்து சான்றிதழ்களை எளிமையாக பதிவிறக்கம் செய்யாலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க..
News December 24, 2025
தூத்துக்குடி: வெட்டிக்கொலை – கல்லூரி மாணவன் கைது!

ஆழ்வார்திருநகரி பகுதியை சேர்ந்த இசக்கிமுத்து (42) என்பவர் பணம் கொடுக்கல் வாங்கல் தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த முத்து (21) என்ற கல்லூரி மாணவனுக்கு பணம் கடனாக கொடுத்ததில் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் முத்து இசக்கிமுத்துவை நேற்று முன்தினம் இரவு ஓட ஓட வெட்டி கொலை செய்தார். வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து தேடி வந்த போலீசார் முத்துவை நேற்றிவு கைது செய்தனர்.


