News March 3, 2025

திருமணம் முடிந்த மறுநாளே பிறந்த குழந்தை..!

image

உ.பி.யில் திருமணம் முடிந்த மறுநாளே பெண்ணுக்கு குழந்தை பிறந்துள்ளது. அது எப்படி 2 நாள்’ல குழந்தை பிறக்கும் என பையன் வீட்டார் அதிர்ந்தனர். ஆனால், கடந்த ஆண்டு மே மாதமே திருமணம் முடிவானதால், இருவரும் தனிமையில் சந்தித்ததன் விளைவே இந்த நிலை எனப் பெண் வீட்டார் கூற, அக்டோபரில் தான் நிச்சயமானது, அப்பெண்ணை ஏற்க மாட்டோம் என மாப்பிள்ளை வீட்டாரும் சொல்கிறார்கள். இருந்தாலும், வயிறை எப்படி மறச்சாங்க..?

Similar News

News March 4, 2025

IND vs AUS போட்டிக்கு புது மைதானம்

image

CT தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் IND vs AUS அணிகள் இன்று மோதுகின்றன. இந்த தொடரில் இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும், IND அணி ஒரே மைதானத்தில் விளையாடியது, மற்ற அணிகளுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இன்றைய போட்டி புது மைதானத்தில் நடக்க உள்ளது. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மேத்திவ் சாண்ட்ரி மேற்பார்வையில், எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியம் இந்த மைதானத்தை தயார் செய்துள்ளது.

News March 4, 2025

இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

image

அபுதாபியில் உ.பி. பெண் ஷாஜாதி கானுக்கு (33) மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2022ல் இவரது பராமரிப்பில் இருந்த 4 மாதக் குழந்தை உயிரிழந்த விவகாரத்தில், அவருக்கு மரண தண்டணை விதிக்கப்பட்டது. இதுகுறித்து அப்பெண்ணின் தந்தை டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், கடந்த பிப்.15ல் தண்டனை நிறைவேற்றப்பட்டதாகவும், நாளை இறுதி சடங்கு நடைபெற உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News March 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: பயனில சொல்லாமை ▶குறள் எண்: 196 ▶குறள்: பயனில்சொல் பராட்டு வானை மகன்எனல் மக்கட் பதடி யெனல். ▶பொருள்: பயனற்றவைகளைச் சொல்லிப் பயன்பெற நினைப்பவனை, மனிதன் என்பதைவிட அவன் ஒரு பதர் என்பதே பொருத்தமானதாகும்.

error: Content is protected !!