News March 3, 2025
தமிழக மீனவர்களும் இந்தியர்கள் தான்: முதல்வர்

தமிழக மீனவர்களை இந்திய மீனவர்களாக பார்க்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாகையில் நடந்த விழாவில் பேசிய அவர், கடந்த 10 வருடங்களில் இலங்கை கடற்படையால் 3,656 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டுள்ளனர் என்றார். கச்சத்தீவு அருகே மீன்பிடிக்க தமிழக மீனவர்களை அனுமதிக்க வேண்டும் எனவும், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் மத்திய அரசு விளையாடக் கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Similar News
News October 28, 2025
தமிழகத்தில் 98% செயல்பாட்டில் அரசு பள்ளி கழிவறைகள்

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் கூறியுள்ளது. ஹரியானா, சண்டிகர் மாநிலங்கள், புதுச்சேரி, கோவா, டையூ டாமன் ஆகிய யூனியன் பிரதேச பள்ளிகளில் 100% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன. குறைந்தபட்சமாக, அருணாசல பிரதேசத்தில் 74.4% கழிவறைகள் செயல்பாட்டில் இருக்கின்றன. ஒட்டுமொத்த இந்தியாவில் 98% கழிவறைகள் செயல்பாட்டில் உள்ளன.
News October 28, 2025
பெர்னாட்ஷா பொன்மொழிகள்

*மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது, எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது.
*நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும்.
*அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது.
*இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. *பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியை போக்காது.
News October 28, 2025
ICU-வில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஸ்ரேயஸ் ஐயர்

ஆஸி.,க்கு எதிரான கடைசி ODI போட்டியின் போது, ஸ்ரேயஸ் ஐயருக்கு விலா எலும்பில் அடிபட்டது. அவருக்கு ICU-வில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதால், ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இந்நிலையில், அவர் ICU-வில் இருந்து சாதாரண வார்டுக்கு மாறியுள்ளதாக ஹாஸ்பிடல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அக்.30 வரை ஹாஸ்பிடலிலேயே ஓய்வெடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். இதனிடையே, அவரது பெற்றோர் சிட்னிக்கு புறப்பட்டுள்ளனர்.


