News March 3, 2025
திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் +2 பொதுத் தேர்வு தொடங்கியது

தமிழகம் முழுவதும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வானது இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. திண்டிவனம் கல்வி மாவட்டத்தில் 49 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்று வருகிறது. இதில் 4778 மாணவர்களும், 4976 மாணவிகளும் என மொத்தம் 9754 தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர். இன்று மொழிப்பாட தேர்வு தொடங்கி உள்ள நிலையில் இம்மாதம் மார்ச் 25 – ஆம் தேதி வரை 12-ம் வகுப்பு பொதுக் தேர்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 18, 2025
பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு தடகள போட்டி

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நேற்று(செப்.17) நடந்தது. இதில் எஸ்.பி., சரவணன் தலைமை தாங்கி, போட்டியை துவக்கி வைத்து பேசினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார், தடகள சங்க தலைவர் பொன்னுசாமி கார்த்திக், செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர்.
News September 18, 2025
விழுப்புரம் விவசாயிகளுக்கு ரூ.53 கோடி ஒதுக்கீடு

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின்படி, நடப்பு ஆண்டு, மாவட்டம் முழுதும் 89 ஆயிரம் விவசாயிகளுக்கு, ரூ.53 கோடியே 40 லட்சம் நிதியுதவி வழங்கப்பட உள்ளது. இவை விவசாயிகளின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவியை நேரடியாக மூன்று சம தவணைகளில் அரசு விவசாயிகளின் வங்கிக்கணக்கில் வழங்கும் வகையில் செயல்படுத்தப்படுகிறது.
News September 18, 2025
விழுப்புரம்: ஓடும் பேருந்தில் செயின் திருட்டு

விழுப்புரம் அருகே கொசப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வி (57). நேற்று முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, அங்கிருந்து அரசு பேருந்தில் ஏறி விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்திற்கு வந்தார். அப்போது கீழே இறங்கி பார்த்தபோது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணவில்லை என விழுப்புரம் தாலுக்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரனை நடத்தி வருகின்றனர்.