News March 3, 2025
அனைத்து பஸ்களிலும் விரைவில் பயணச்சீட்டு கருவி

அனைத்து பஸ்களிலும் பயணச்சீட்டு கருவி விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது. முதலில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்திலும், விரைவு போக்குவரத்துக் கழகத்திலும் 2024இல் இக்கருவி அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் விழுப்புரம், கும்பகோணம் கோட்டங்களிலும் நடைமுறையில் வந்த நிலையில், சேலம், கோவை, மதுரை, நெல்லை கோட்டங்களிலும் செயல்பாட்டிற்கு வரவுள்ளதாக கூறியுள்ளது.
Similar News
News March 18, 2026
FLASH: தேர்தல் களத்தில் சசிகலாவின் அடுத்த மூவ்!

அபுமமுக கட்சியில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விருப்பமனு பெறலாம் என சசிகலா அறிவித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள முகாம் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை விருப்பமனு வழங்கப்படும் எனவும், வரும் 22-ம் தேதி இரவு 7 மணிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். டெல்டா, தென் மாவட்டங்களில் 60 தொகுதிகளை சசிகலா குறிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
News March 18, 2026
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் கட்சியில் இருந்து நீக்கம்

கேரளத்தில் CPM மூத்த தலைவர் TK கோவிந்தன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். தளிப்பறம்பா தொகுதியில் சொந்த கட்சி வேட்பாளர் PK ஷியாமலாவை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட முயன்றதால் கோவிந்தன் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. பதவி ஆசையால், காங்., கைக்கூலியாக கோவிந்தன் மாறிவிட்டதாக CPM நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். சீட்டு கொடுக்காததால் <<19403862>> CPI-ன் MLA முகுந்தன்<<>>, நேற்று பாஜகவில் இணைந்தது கவனிக்கத்தக்கது.
News March 18, 2026
900 பேர் பலி.. அடுத்த சோகம்

லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினருக்கு எதிராக மார்ச் 2-ம் தேதி முதல் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த கொடூர தாக்குதல்களில் சிக்கி லெபனானில் 67 பெண்கள் மற்றும் 111 குழந்தைகள் உட்பட 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மேலும், 2,221 படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல் தொடர்வதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.


