News March 3, 2025
உத்தரகாண்ட் பனிச்சரிவு பலி எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் நேரிட்ட பனிச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 8ஆக உயர்ந்துள்ளது. சமோலியில் அண்மையில் நேரிட்ட பனிச்சரிவில் 55 எல்லைச் சாலை அமைப்பு ஊழியர்கள் சிக்கி புதையுண்டனர். அவர்களில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டன. மேலும் 47 பேர் பத்திரமாக உயிருடன் மீட்கப்பட்டனர். இதையடுத்து மீட்புப் பணி நிறைவு பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News March 18, 2026
சற்றுமுன்: தேர்தலில் போட்டி இல்லை.. திருநாவுக்கரசர்

லோக்சபா தேர்தலில் சீட் வழங்கப்படாததால், காங்., மூத்த தலைவர் திருநாவுக்கரசர் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று கூறப்பட்டது. இந்நிலையில், வரும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் திருநாவுக்கரசர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ராஜ்யசபா, லோக்சபா எம்பியாக போவேனே தவிர தமிழ்நாட்டில் எம்எல்ஏ, அமைச்சராகும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்
News March 18, 2026
6 தொகுதிகளால் காங்., – திமுக இடையே பஞ்சாயத்து

புதுச்சேரியில் திமுக – காங்., இடையே உடன்பாடு ஏற்படாததற்கு 6 தொகுதிகளில் சிக்கல் நிலவுவதுதான் காரணம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராஜ்பவன், நெல்லித்தோப்பு, மண்ணாடிப்பட்டு, திருபுவனை, மங்கலம், கதிர்காமத்தில் போட்டியிட 2 கட்சிகளும் விரும்புவதால், தொகுதிப்பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், தொகுதிகளை இறுதி செய்வது தொடர்பாக புதுச்சேரி காங்., தலைவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளனர்.
News March 18, 2026
CPI-க்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு(CPI) 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஸ்டாலின் முன்னிலையில் சற்றுமுன் தொகுதிப் பங்கீடு உடன்படிக்கை கையெழுத்தானது. கடந்த 2021 தேர்தலில் 6 தொகுதிகளில் போட்டியிட்டு தளி மற்றும் பவானிசாகர் தொகுதிகளில் வெற்றி பெற்ற CPI-க்கு இத்தேர்தலில் ஒரு தொகுதி குறைக்கப்பட்டுள்ளது.


