News March 3, 2025

5 மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை

image

அய்யா வைகுண்டர் அவதார தினமான நாளை தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், விழுப்புரத்தில் அங்காளம்மன் காேயில் தேரோட்டத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 5 மாவட்டங்களிலும் நாளை அரசு அலுவலகங்கள், பள்ளி – கல்லூரிகள் திறக்கப்படாது. அன்று அவற்றுக்கு விடுமுறை.

Similar News

News March 24, 2026

இன்றைய நல்ல நேரம்

image

மார்ச் 24, பங்குனி 10 ▶கிழமை: செவ்வாய் ▶நல்ல நேரம்: 7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 3:00 PM – 4:30 PM ▶எமகண்டம்: 9:00 AM – 10:30 AM ▶குளிகை: 12:00 PM – 1:30 PM ▶திதி: சஷ்டி ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: வடக்கு ▶பரிகாரம்: பால்.

News March 24, 2026

கோடை வந்தாச்சு.. இதோ சில டிப்ஸ்!

image

➤கோடையில் சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் ஏற்படும் பாதிப்புகளில் தப்பிக்க நல்ல சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ➤உடலுக்கு குளிர்ச்சி தரும் நீர்ச்சத்துள்ள பழங்களை சாப்பிடுவது அவசியம். ➤இரவில் பனங்கற்கண்டு கலந்து பால் அருந்தினால் உடல் சூடு தணியும். ➤பகலில் கொத்தமல்லித் தழையை அரைத்து மோரில் கலந்து குடித்தால் உடல் சூடு குறையும். ➤கண்களின் நலனுக்கு பப்பாளி பழம் சாப்பிடலாம்.

News March 24, 2026

சுங்​கச்​சாவடி கட்​ட​ணம் உயர்கிறது

image

தமிழகத்​தில் 60 சுங்​கச்​சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5% சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னை – கன்​னி​யாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்​ளிட்ட தேசிய நெடுஞ்​சாலைகள் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏற்கெனவே போர் சூழலால் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

error: Content is protected !!