News March 3, 2025
பயப்படுவதற்கு நாங்கள் என்ன அதிமுகவா? உதயநிதி

மத்திய அரசு மிரட்டினால் பயப்படுவதற்கு தாங்கள் ஒன்றும் அதிமுகவோ, இபிஎஸ்ஸோ கிடையாது என உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஹிந்தியை திணிக்க முயன்றால், மாநிலத்தில் மீண்டும் மொழிப்போர் வெடிக்கும் எனவும், ஏற்கனவே ஹிந்தி திணிப்பால் பல மாநிலங்களில் தாய்மொழி அழிந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், மத்திய அரசை கண்டித்து, இன்று முதல் தொகுதிதோறும் திமுக சார்பில் பொதுக்கூட்டங்கள் நடத்தபட உள்ளன.
Similar News
News April 6, 2026
3 பாஸ்போர்ட், வெளிநாட்டில் சொத்து.. CM மனைவி மீது புகார்

அசாம் CM ஹிமந்த பிஸ்வா சர்மாவின் மனைவி ரினிகி 3 பாஸ்போர்டுகளை வைத்திருப்பதாகவும், வெளிநாட்டில் பல தொழில்களை நடத்திவருவதாகவும் காங்.,கின் பவன் கேரா குற்றம்சாட்டியிருந்தார். இதை குறிப்பிடாமல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருப்பதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரியிருந்தார். இந்நிலையில், அவதூறு பரப்பினால் வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவீர்கள் என CM சர்மா எச்சரித்துள்ளார்.
News April 6, 2026
வானதி பிரசார கூட்டத்தை புறக்கணித்த அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளரான வானதியை அறிமுகம் செய்யும் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இக்கூட்டத்தில் அதிமுக, அமமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சியினருடன் அண்ணாமலையும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவையில் இருந்தபோதும் அவர் பங்கேற்காதது ஏன் என்று அரசியல் ரீதியாக கேள்வி எழுந்துள்ளது.<<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. அதிர்ச்சியூட்டும் தகவல்

<<19578782>>நடிகை சுபாஷினி<<>> தற்கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 3-ம் தேதி சென்னை வந்த அவர் ஷூட்டிங்கிற்காக போரூரில் உள்ள தனியார் குடியிருப்பு ஒன்றில் தங்கியிருந்துள்ளார். நேற்று இரவு, பெங்களூருவில் உள்ள தனது கணவருடன் வீடியோ காலில் பேசியபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது மனமுடைந்த சுபாஷினி, கணவருடன் பேசியபடியே தூக்கிட்டு உயிரை மாய்த்துக் கொண்டது தெரியவந்துள்ளது.


