News March 30, 2024
தென்காசி: கத்தியால் குத்திக் கொலை.. ஒருவர் கைது

மேலக்கடையநல்லூரை சேர்ந்த மாரியப்பன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர் வீட்டில் தண்ணீர் பிடிக்க சென்றபோது, தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த லட்சுமணன் மாரியப்பனை நேற்று கத்தியால் குத்தியதில் மாரியப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். அவரை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் மாரியப்பன் உயிரிழந்துள்ளார்.இதுகுறித்த புகாரில் போலீசார் லட்சுமணனை கைது செய்தனர்.
Similar News
News December 22, 2025
குற்றாலநாதர் கோவிலில் திருவாதிரை கொடியேற்றம்

குற்றாலம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற குற்றாலநாதர் திருக்கோவிலில் வரும் டிசம்பர் 25ம் தேதி திருவாதிரை திருவிழா முன்னிட்டு அண்டைய தினம் காலை 5.40மணிக்கு மேல் 6.40மணிக்குள் கொடியேற்றுத்துடன் துவங்குகிறது. தினமும் அம்பாள் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
News December 22, 2025
தென்காசி: தேர்வு இல்லாமல் SBI வங்கியில் வேலை! APPLY

தென்காசி மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள் இங்கு க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.51,000 வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த பயனுள்ள தகவலை SHARE செய்யுங்க.
News December 22, 2025
தென்காசி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) என்ற எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க.. அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். அனைவருக்கும் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.


