News March 3, 2025

அமைச்சரின் மகளுக்கு பாலியல் தொல்லை.. ஒருவன் கைது

image

மத்திய இணை அமைச்சர் ரக்‌ஷாவின் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில், ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான். மகாராஷ்டிராவில் நடந்த சிவராத்திரி விழாவின் போது இச்சம்பவம் நடந்தது. ஒரு குறிப்பிட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் இக்குற்றத்தில் ஈடுபட்டதாகவும், அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அம்மாநில CM பட்னவிஸ் உறுதியளித்துள்ளார். அரசியல் ரீதியாக இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது.

Similar News

News March 3, 2025

காதலன் கவலைக்கிடம்.. எலி பேஸ்ட் காதலி கைது

image

விழுப்புரத்தில் காதலனை <<15637846>>கொடூரமாக கொலை செய்ய முயற்சி<<>> செய்த காதலியை போலீசார் கைது செய்துள்ளனர். சட்டக்கல்லூரி மாணவர் ஜெயசூர்யாவுக்கு காதலி ரம்யா தேநீரில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்துள்ளார். இதை குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்ட காதலன் சென்னை ஸ்டான்லி ஹாஸ்பிடலில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனையடுத்து, தனது குடும்பத்துடன் தலைமறைவான ரம்யாவை போலீசார் கைது செய்தனர்.

News March 3, 2025

இயர்போன் பயன்படுத்துவோரா நீங்கள்!

image

அதிக ஒலியிடும் சாதனங்களை பயன்படுத்தினால் செவித்திறன் பாதிக்கும் என பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சாதாரண ஒலி அளவில் இருந்தாலும், புளுடூத் இயர்போன், ஹெட்போன் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் 50 டெசிபல் ஒலிக்கும் குறைவாக இருக்கும் இயர்போனை பயன்படுத்தவும். இயர்போனை 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ஹெட்போன் பயன்பாட்டை குறைக்க நீங்கள் என்ன செய்வீங்க கமெண்ட் பண்ணுங்க

News March 3, 2025

போப் உடல்நிலை எப்படி இருக்கிறது? வாடிகன் விளக்கம்

image

நிமோனியா பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கத்தோலிக்க மதகுரு போப் பிரான்சிஸ்-க்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியாகியுள்ள மருத்துவ அறிக்கையில், 88 வயதான போப் இரவு முழுவதும் நன்றாகத் தூங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து சீராக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

error: Content is protected !!