News March 30, 2024

மயிலாடுதுறை வாக்காளர்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

image

பாராளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவினை வலியுறுத்தி ஊராட்சி அளவில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணி, உறுதிமொழி, ரங்கோலி கோலம் இடுதல், வாக்காளர் விழிப்புணர்வு வாகனம் தொடங்கி வைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. எனவே இத்தேர்தலில் வாக்காளர்கள் தவறாது வாக்களித்து ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் மகாபாரதி இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News October 16, 2025

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆய்வு

image

மயிலாடுதுறை அரசு பெரியார் மாவட்ட தலைமை மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சேவைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். மேலும் மருத்துவர்கள் செவிலியர்கள் வருகை பதிவேடுகளை பார்வையிட்டு மருந்து மாத்திரை கையிருப்பு விவரங்களை கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

News October 16, 2025

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவிப்பு

image

மயிலாடுதுறை காவல்துறை செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. இதில் ஆன்லைன் விளையாட்டில் உங்கள் நேரத்தையும் பணத்தையும் இழக்க வேண்டாம். இணையத்தில் உங்களின் பணத்தை பறிக்க பல போலியான ஆன்லைன் விளையாட்டுக்கள் உள்ளது. எனவே எச்சரிக்கையாக இருக்கவும் என தெரிவிக்கபட்டது. மேலும் தகவல்களுக்கு Cyber Crime Help Line: 1930 எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது www.cybercrime.gov.in இணையத்தளம் வாயிலாக புகாரளிக்கலாம்.

News October 16, 2025

மயிலாடுதுறை: 2 கிலோ குட்கா பறிமுதல்

image

மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி உத்தரவின்படி போலீசார் மாவட்டம் முழுவதும் சட்டவிரோத குட்கா விற்பனை மற்றும் கடத்தல் குறித்து தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு மயிலாடுதுறை காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் போலீசார் நேற்று சோதனை மேற்கொண்டதில் 2கி குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்த மயிலாடுதுறை பொட்டவெளி தெருவை சேர்ந்த பிரசாந்த் 35 என்பவரை கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!