News March 2, 2025
மத்திய அமைச்சர் மகளுக்கு மர்ம நபர்கள் டார்ச்சர்

மகாராஷ்டிர மாநிலம், ஜல்கோனில் மத்திய இணை அமைச்சர் ரக்சா காட்சேயின் மகளை பின்தொடர்ந்து சென்று மர்ம நபர்கள் டார்ச்சர் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து முக்தாய்நகர் போலீஸ் நிலையத்தில் தனது மகள் மற்றும் அவரின் தோழிகளுடன் வந்து காட்சே புகார் அளித்தார். சிவராத்திரியில் இச்சம்பவம் நடந்ததாக புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். புகாரின் பேரில் ஒருவரை போலீஸ் கைது செய்துள்ளது.
Similar News
News August 6, 2025
படுக்கையறையில் இருக்கக் கூடாத 10 பொருள்கள்

படுக்கை அறையில் நாம் வைக்கும் சில பொருள்கள் வாஸ்துப்படி தீமைகளை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அவை: *டீ, காபி கப், சாப்பிட்ட தட்டுகள் உள்ளிட்ட கழுவப்படாத பாத்திரங்கள் *தலையணைக்கு கீழே பேப்பர், புத்தகம், தங்க நகைகள் *படுக்கையில் எலக்ட்ரானிக் கேட்ஜெட்டுகள், செல்லப்பிராணி. இவை தூக்கத்தை பாதிப்பதுடன், நெகடிவ் எனர்ஜியை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. அதேபோல படுக்கைக்கு நேராக கண்ணாடி இருக்கக் கூடாது.
News August 6, 2025
UPI பயன்படுத்த கட்டணம்? RBI கவர்னர் அறிவிப்பு

Gpay, Phonepe போன்ற UPI சேவைகளுக்கு விரைவில் கட்டண அறிவிப்பு வெளியாகலாம். இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த RBI கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா, UPI சேவையை நீண்டகாலத்துக்கு இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்க முடியாது. யாராவது அந்த சுமையை ஏற்றுதான் ஆகவேண்டும் என்றார். ஏற்கெனவே <<17195322>>தான் கூறியதை<<>> அவர் மீண்டும் உறுதிப்படுத்தி இருப்பதால், விரைவில் கட்டண விதிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 6, 2025
டிரம்புக்கு பதில் மோடியை அழைப்பேன்: பிரேசில் அதிபர்

சமீபத்தில் பிரேசில் பொருட்கள் மீது 50% வரி விதித்தார் டிரம்ப். இந்நிலையில் இதுதொடர்பாக விவாதிக்க பிரேசில் அதிபர் எப்போது வேண்டுமானாலும் தன்னை அழைக்கலாம் என டிரம்ப் தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பிரேசில் அதிபர் லுலா டா சில்வா, தான் டிரம்பை அழைத்து இதுபற்றி பேசபோவதில்லை என்றும், அதற்கு மாற்றாக PM மோடி, சீனா அதிபர் ஜி ஜின் பங்கை அழைத்து பேசுவேன் என தெரிவித்துள்ளார்.