News March 2, 2025
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு: விரைவில் அறிவிப்பு

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி (DA), 3% உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. AICPI Index அடிப்படையில் ஆண்டுக்கு இருமுறை DA உயர்த்தப்படுகிறது. அதன்படி, ஜனவரி மாதத்துக்கான DA உயர்வு வழக்கமாக மார்ச்சில் தான் அறிவிக்கப்படும். அந்த வகையில் ஹோலி பண்டிகைக்கு (மார்ச் 14) முன்பாக, மத்திய அரசு அகவிலைப்படி உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த DA உயர்வு ஜூலையில் அறிவிக்கப்படும்.
Similar News
News March 13, 2026
விஜய்க்கு எதிராக நடிகர்களை களமிறக்கும் திமுக

திமுக மேடைகளில் விஜய்க்கு எதிராக நடிகர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். வடிவேலுவை தொடர்ந்து தற்போது நடிகர் நாசர், பிரபலமாக இருந்தால் மட்டும் போதும் என்று நினைத்து கட்சி ஆரம்பிக்கிறார்கள் என விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். மேலும், திட்டங்களை பட்டியலிட்டு சொல்வதல்ல கட்சி, தனியாக கொள்கை இருக்க வேண்டும் எனக்கூறிய அவர், படங்களின் பட்டியலை வைத்து நான் அரசமைப்பேன் என்று சொல்வது தேவையற்றது என்றார்.
News March 13, 2026
சற்றுநேரத்தில் வங்கிக் கணக்கில் ₹2,000

மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் 9.32 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ₹2,000 வரவு வைக்கப்படவுள்ளது. அசாம் கவுகாத்தியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் PM மோடி திட்டத்தின் 22-வது தவணையாக ₹18,640 கோடி வெளியிடுகிறார். இதற்கு விவசாயிகள், தங்களது வங்கிக் கணக்கில் E-KYC சரிபார்க்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்வது அவசியம்.
News March 13, 2026
MP-க்கும், பெண்களுக்கும் பாதுகாப்பில்லை: தமிழிசை

MP கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் தாக்கப்பட்டதற்கு TN அரசின் பதில் என்ன என்று தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார். இதே சம்பவம் வட இந்தியாவில் நடந்திருந்தால், இங்குள்ள 40 MP-யும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்திருப்பார்கள் என்றும், ஆனால் சக MP-யின் அலுவலகம் தாக்கப்பட்டதற்காக எதுவும் பேசவில்லை எனவும் கூறினார். தமிழகத்தில் MP-க்கும் பாதுகாப்பில்லை, பெண்களுக்கும் பாதுகாப்பில்லை எனவும் சாடினார்.


