News March 2, 2025
அதிவேகமாக சென்ற தனியார் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு

தஞ்சாவூர் தெற்குவீதியை சேர்ந்தவர் நரசிராம் பட்டேல் (45). மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இவர் தொழில் ரீதியாக பட்டுக்கோட்டை சென்று மீண்டும் தஞ்சைக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். கீழவஸ்தாச்சாவடி பகுதி அருகே சென்று கொண்டிருந்த போது பட்டுக்கோட்டை நோக்கி சென்ற தனியார் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் நரசிராம் பட்டேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Similar News
News August 23, 2025
தஞ்சையில் இத்தனை பழமையான இடங்களா?

➡️கல்லணை : 2000 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை பெரிய கோயில் : 1000 ஆண்டுகள் பழமை
➡️தாராசுரம் ஐராவதேசுவரர் கோயில்: 900 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை சரஸ்வதி மகால் நூலகம் : 500 ஆண்டுகள் பழமை
➡️தஞ்சை அரண்மனை: 500 ஆண்டுகள் பழமை
➡️பீரங்கி மேடை: 400 ஆண்டுகள் பழமை
➡️ஷ்வார்ட்ஸ் தேவாலயம்: 220 ஆண்டுகள் பழமை
➡️மனோரா கோட்டை: 200 ஆண்டுகள் பழமை
➡️ நம்ம ஊரு பெருமைகளை அனைவருக்கும் ஷேர் பண்ணி தெரியப்படுத்துங்கள்!
News August 23, 2025
ஆஞ்சனேயருக்கு 508 கிலோ துளசியால் அலங்காரம்

கும்பகோணத்தில் விஸ்வரூப ஜெயமாருதி கோயிலில் நேற்று (ஆக 22) ஆவணி மாத அமாவாசை நாளை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு 508 கிலோ துளசி இலைகளால் வெள்ளிக்கிழமை அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமியை தரிசனம் செய்தனர். தொடர்ந்து இப்பூஜையில் மட்டை தேங்காயை சிவப்பு துணியில் கட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
News August 23, 2025
கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க வேண்டும் என 28 வருடங்களுக்கு மேலாக கும்பகோணம் பகுதி மக்கள் போராடி வருகின்றனர். இந்நிலையில், கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே கும்பகோணம் மாநகர அகில பாரத இந்து ஆன்மீக பேரவை சார்பில், கும்பகோணம் மாவட்டம் அமைக்க வேண்டி விநாயகர்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.