News March 2, 2025

40 ஆண்டு உள்நாட்டு போர் நின்றது

image

துருக்கியில் 40 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை நிறுத்துவதாக குர்திஸ் தொழிலாளர் கட்சி அறிவித்துள்ளது. தங்கள் மீது தாக்குதல் நடத்தப்படாத வரை, இனி ஆயுதம் ஏந்தி போராட மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளது. 1984 முதல் இந்த அமைப்பு உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்தது. இதனால் அந்த அமைப்பின் தலைவர் ஓசலான் 1999ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த போரில் 40,000 மக்கள் கொல்லப்பட்டனர்.

Similar News

News March 13, 2026

சற்றுமுன்: மீண்டும் அதிமுகவில் இணைந்தார்

image

திமுகவில் OPS இணைந்ததை விரும்பாத அவரது ஆதரவாளர்கள் பலரும் அதிமுக, தவெகவுக்கு தாவி வருகின்றனர். இந்நிலையில், OPS-ன் ஆதரவாளராக இருந்த திருவையாறு Ex MLA MGM சுப்ரமணியன் மீண்டும் அதிமுகவுக்கு திரும்பியுள்ளார். சென்னையில் EPS-ஐ சந்தித்த அவர், தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவேன் என உறுதியளித்துள்ளார். ஆதரவாளர்களாக இருந்தவர்கள் தன்னை விட்டு பிரிந்து செல்வது OPS-க்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

News March 13, 2026

CINEMA 360: வேள்பாரியில் தனுஷ்!

image

*ஷங்கர் இயக்கவுள்ள ‘வேள்பாரி’ படத்தில் தனுஷ் & விக்கி கவுசல் நடிப்பார்கள் என கூறப்படுகிறது *ஏப்ரலில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யாவின் ‘கருப்பு’ மே மாதத்திற்கு தள்ளிப்போகிறதாம் *‘கர’ படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது *‘என்ஜாயி எஞ்சாமி’ பாடலுக்காக சம்பளம் வழங்கவில்லை என அறிவு பதிவிட, ஆதாரத்துடன் விவாதிக்க தயாரா என சந்தோஷ் நாராயணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

News March 13, 2026

தமிழகத்தில் தினமும் ஒரு நிர்பயா: இன்பதுரை MP

image

மணிப்பூரைப் போல தமிழகத்திற்கும் மத்திய அரசு நாடாளுமன்ற குழுவை அனுப்பி பெண்கள் பாதுகாப்பு பற்றி ஆய்வு செய்ய வேண்டும் என இன்பதுரை MP வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், கடந்த 10 நாள்களில் மட்டும் 2½ வயது குழந்தை, 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வேதனை தெரிவித்தார். மேலும், தினம் தினம் ஒரு நிர்பயா வழக்கை தமிழகம் சந்தித்து கொண்டிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

error: Content is protected !!