News March 2, 2025
8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி – மின்னலுடன் மழை

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக முன்னறிவித்துள்ளது. இதேபோல், நெல்லை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?
Similar News
News April 6, 2026
சர்ச்சைகளுக்கு அஸ்வத்தாமன் முற்றுப்புள்ளி

சீட் கிடைக்காத அதிருப்தியில் பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன், பண்ருட்டி தொகுதியில் சுயேச்சையாக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், அத்தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் மோகனின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் அஸ்வத்தாமனும் பங்கேற்றார். பின்னர் பேட்டியளித்த அவர், தேர்தலில் மோகனின் வெற்றிக்கு பாடுபடுவேன் எனக் கூறி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
நடிகை சுபாஷினி மரணம்.. உருக்கமான தகவல்

‘கயல்’ சீரியல் <<19578782>>நடிகை சுபாஷினியின் தற்கொலை<<>> சின்னத்திரை ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. வரும் 12-ம் தேதி அவருக்கு பிறந்த நாள். மகிழ்ச்சியாக இருக்க வேண்டிய குடும்பம் தற்போது கண்ணீரில் தத்தளிக்கிறது. அதுமட்டுமின்றி, வரும் 21-ம் தேதி சுபாஷினிக்கு 2-ம் ஆண்டு திருமண நாளாகும். தன் வாழ்வில் முக்கிய மாதமாக இருக்கும் ஏப்ரலிலேயே சுபாஷினி தற்கொலை செய்திருப்பது பெரும் சோகம். RIP
News April 6, 2026
3 மேட்ச்சில் வெறும் 24 ரன்கள்.. கிரீன் பரிதாபங்கள்

KKR அணியால் ஏலத்தில் ₹25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் நடப்பு IPL-ல் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்திருக்கிறார். கடந்த 3 போட்டிகளில் அவர் 24 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். மேலும், இன்னும் சில போட்டிகளுக்கு பிறகே அவர் பந்துவீசுவார் என கூறப்படுகிறது. இவ்வளவு பெரிய தொகைக்கு எடுத்த வீரர் சரியாக ஆடாதது KKR ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது.


