News March 2, 2025
ரூ.23.48 லட்சம் கோடி UPI பரிவர்த்தனை

கடந்த ஜனவரி மாதத்தில் நாட்டு மக்கள், ஜிபே, போன் பே உள்ளிட்ட UPI வசதிகள் மூலம் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை விவரம் வெளிவந்துள்ளது. அதில், ஜனவரி மாதத்தில் மட்டும் நாட்டு மக்கள் ரூ.23.48 லட்சம் கோடிக்கு பரிவர்த்தனை செய்திருப்பது தெரிய வந்துள்ளது. 16.99 பில்லியன் எண்ணிக்கை பரிவர்த்தனை நடந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. UPI பரிவர்த்தனையில் இது பெரிய சாதனை எனப்படுகிறது. நீங்கள் UPI பயன்படுத்துறீங்களா?
Similar News
News April 6, 2026
கோவை : இரவு ரோந்து போலீசார் விவரம்

கோவை மாவட்டத்தில் இன்று (06.04.2026) இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைப்பேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News April 6, 2026
நகைக் கடன் பெறுவதற்கு புதிய கட்டுப்பாடுகள்

நகைக் கடன் வழங்குவதில் வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை RBI வகுத்துள்ளது. இனி நகையின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் வழங்கப்படும். இதற்குமுன் 85% வரை கடன் வழங்கப்பட்ட நிலையில், தங்கத்தின் விலை திடீரென வீழ்ச்சியை சந்திக்கும்போது ஏற்படும் இடர்பாடுகளை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், நகைக் கடன் பெறுபவர்கள் அடையாளச் சான்று ஆவணங்களை சமர்ப்பிப்பது இனி கட்டாயம்.
News April 6, 2026
KKR Vs PBKS ஆட்டம் மழையால் பாதிப்பு

KKR, PBKS அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மழையின் குறுக்கீடு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 3.4 ஓவர்கள் முடிந்துள்ள நிலையில், 2 விக்கெட் இழப்பிற்கு 34 ரன்களை KKR எடுத்துள்ளது. ஃபின் ஆலன், கேமரூன் கிரீன் ஆகியோரின் விக்கெட்களை சேவியர் பார்ட்லெட் வீழ்த்தினார். 8 மணிக்கு 90% மழைக்கு வாய்ப்பு என தகவல் வெளியாகியிருந்தது. எனவே, போட்டி தொடங்குமா என உறுதியாக தெரியவில்லை.


