News March 1, 2025
பாக்.கில் IND விளையாடாதது நல்லது: உத்தப்பா

சாம்பியன் டிராபி போட்டியில் பாகிஸ்தானில் வைத்து இந்தியா விளையாடாதது நல்லது என்று உத்தப்பா தெரிவித்துள்ளார். துபாயில் வைத்து பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா விளையாடி வெற்றி பெற்றது. இதுகுறித்து பேட்டியளித்துள்ள உத்தப்பா, பாகிஸ்தானில் இப்போட்டி நடந்திருந்தால், இரு அணிகளும் பரஸ்பரம் புகார் தெரிவிக்க வேண்டிய நிலை வந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். நீங்கள் என்ன நினைக்கிறீங்க?
Similar News
News March 3, 2025
சீனியர்களுக்கு ‘டாட்டா’ காட்டும் திமுக

2026 சட்டசபைத் தேர்தலுக்கான பணிகளை திமுக முழு வேகத்தில் தொடங்கி விட்டது. அந்த வகையில், பார்த்த முகத்தையே பார்த்து மக்கள் சலித்துவிட்டதால் தேர்தலில் புதியவர்கள், இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்க வியூக வகுப்பாளர்கள் குழு அறிவுறுத்தியுள்ளது. இந்த ஆலோசனைப் படி, கட்சியில் சீனியர்களாக இருக்கும் முக்கிய பிரமுகர்கள் உள்பட பலருக்கு, வரும் தேர்தலில் சீட் கிடைக்க வாய்ப்பில்லை என திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
News March 3, 2025
திமுக கூட்டணியில் கொளுத்திப் போட்ட ஜெயக்குமார்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, இடதுசாரிக் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. இதில் சில கட்சிகள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஜெயக்குமார் மேலும் தீயை பற்ற வைத்துள்ளார். திமுக கூட்டணி உடையும் என அவர் அளித்த பேட்டி, அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்த கட்சி வெளியேறும் என ஜெயக்குமார் கூறாத நிலையில், திருமாவளவன் விசிக MLA எண்ணிக்கை குறித்து பேசியது யூகங்களை கிளப்பியுள்ளது.
News March 3, 2025
கிர் பூங்காவில் ‘லயன் சஃபாரி’ செய்த பிரதமர் மோடி

சர்வதேச வனவிலங்கு தினத்தையொட்டி, குஜராத்தின் கிர் தேசிய வனவிலங்கு சரணாலயத்தை PM மோடி பார்வையிட்டார். அங்கு ‘லயன் சஃபாரி’ செய்த அவர், சிங்கங்களை புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். இதுகுறித்து X பதிவில், பூமியின் நம்பமுடியாத பல்லுயிரியலைப் பாதுகாப்பதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் எடுப்போம் எனவும், எதிர்கால சந்ததியினருக்காக உயிரினங்களின் எதிர்காலத்தை பாதுகாப்போம் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.