News March 1, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுத்திடவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காத்திடவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள், இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.01 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விபரம்.
Similar News
News March 3, 2025
மாமூல் கேட்ட எஸ்ஐ சஸ்பெண்ட் எஸ்பி உத்தரவு

வீரகனூர் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த எஸ்ஐ கருப்பண்ணன், சட்டவிரோதமாக மது விற்பனை செய்யும் வியாபாரியிடம் மாமுல் கேட்ட வீடியோ வைரலானது. இதனை எடுத்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயில் அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதற்கு 2500 ரூபாய் தர வேண்டும் என எஸ்ஐ கருப்பண்ணன் கேட், கடைக்காரர் 1500 ரூபாய் தருவதாக பேசிய வீடியோ வைரல் ஆனது.
News March 3, 2025
சேலத்தில் 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு

சாலை பாதுகாப்பு குறித்து போலீசார், அரசு அலுவலகர்கள் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் பிருந்தா தேவி தலைமையில் நடந்தது. மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுதல், செல்போன் பேசிக்கொண்டு செல்வது உள்ளிட்ட விதிமுறைகள் கடைபிடிக்காத 219 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளன. 137 பேரின் ஓட்டுனர் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
News March 3, 2025
அஞ்சல் அலுவலகத்தில் காகிதமில்லா பரிவர்த்தனை

அஞ்சல்துறை வாடிக்கையாளர் வசதிக்கு, காகிதமில்லா ஆதார் அடிப்படையிலான இ-கே.ஒய்.சி எனும் அங்கீகார செயல்முறை பரிவர்த்தனை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் கணக்கில் உள்ள வாடிக்கையாளரின் கே.ஒய்.சி. விபரங்களை மேம்படுத்திக் கொள்ளுதல், நிதி பரிவர்த்தனை என முக்கிய பரிவர்த்தனைகளை ஆதார் அடிப்படையில் கைரேகை மட்டும் வைத்து அஞ்சல்நிலையங்களில் மேற்கொள்ளலாம் என சேலம் கிழக்கு கோட்ட அஞ்சல் முதுநிலை கண்காணிப்பாளர்