News March 1, 2025
உங்களிடம் ₹100, ₹200, ₹500 நோட்டு இருந்தா இதை பாருங்க

ரூபாய் நோட்டுகளின் நுனிப்பகுதியில் கோடுகள் இருப்பது ஏன் என தெரியுமா?. பார்வை குறைபாடு உள்ளவர்கள் நோட்டின் மதிப்பை அடையாளம் காண, இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோடுகள் ₹100, ₹200, ₹500 நோட்டுகளில் மட்டும்தான் இருக்கும். ஒவ்வொரு கோட்டிற்கு தகுந்தார் போல வரிகள் இருக்கும். எ.கா: ₹100 தாளில் அதன் இருபுறமும் 4 கோடுகள் இருக்கும். ₹200ல் 4 வரிகளுக்கு இடையில் வட்ட புள்ளிகள் இருக்கும்.
Similar News
News March 3, 2025
இன்றைய (மார்ச்.03) நல்ல நேரம்

▶மார்ச்- 03 ▶மாசி – 19 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 06:30 AM – 07:30 AM & 04:30 PM – 05:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 09:30 AM – 10:30 AM & 07:30 PM – 08:30 PM ▶ராகு காலம்: 07:30 AM – 09:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 01:30 PM- 03:00 PM ▶திதி: சதுர்த்தி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶சந்திராஷ்டமம்: உத்திரம் ▶நட்சத்திரம் : ரேவதி.
News March 3, 2025
பாஜக vs காங்: யார் ஹிந்து விரோதி?

யார் ஹிந்து மதத்திற்கு எதிரானவர்கள் என்பதில் பாஜக- காங். இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. ராமர் கோயில் பிரதிஷ்டை விழாவிலும், மகா கும்பமேளாவில் பங்கேற்காமல் காங். மூத்த தலைவர்கள் ஹிந்து விரோதிகள் என நிரூபித்துள்ளதாக பாஜக சாடியுள்ளது. இதற்கு பதிலடி கொடுத்த காங்., பல மத்திய அமைச்சர்கள், பாஜக கூட்டணி கட்சி தலைவர்களின் பெயர்களை பட்டியலிட்டு இவர்களும் ஹிந்து விரோதிகள் தானே என சாடியுள்ளது.
News March 3, 2025
FIR போட சொன்ன கோர்ட்.. SEBI எடுத்த முடிவு

முன்னாள் SEBI தலைவர் மாதபி உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிரான பங்குச்சந்தை மோசடி, ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக சிறப்பு ஊழல் தடுப்பு நீதிமன்றம் FIR பதிவு செய்ய உத்தரவிட்டது. இதை எதிர்த்து விரைவில் சட்ட நடவடிக்கைகளை தொடங்க இருப்பதாக SEBI அறிவித்துள்ளது. சுபன் ஸ்ரீவஸ்தவா என்பவர் தாக்கல் செய்த மனு அடிப்படையில் கோர்ட் இத்தகைய உத்தரவிட்ட நிலையில், இவை அடிப்படை ஆதாரமற்றவை என SEBI மறுத்துள்ளது.