News March 1, 2025
அரசுப் பள்ளிகளில் 25,000 மாணவர்களைச் சேர்க்க இலக்கு

சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,000 குழந்தைகளை 1-ம் வகுப்பில் பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்துள்ளனர்.அதேபோல் இந்தாண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளியில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- சேலம் ஆட்சியர்.
Similar News
News March 3, 2025
மது அருந்தி வாகனம் ஓட்டாதீர் : காவல்துறை விழிப்புணர்வு

சேலம் மாவட்ட காவல்துறை சார்பாக தினமும் விழிப்புணர்வு புகைப்படம் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று (மார்ச்.02) மது அருந்தி வாகனம் ஓட்டாதீர்… என்ற வாசகம் பொருந்திய விழிப்புணர்வு புகைப்படத்தை சேலம் மாவட்ட காவல் துறை சார்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. * ஷேர் செய்யவும்.
News March 2, 2025
சேலம் மாவட்ட இரவு ரோந்து போலீசார் விவரம் வெளியீடு

சேலம் ஊரகம், வாழப்பாடி, ஆத்தூர், தலைவாசல், கருமந்துறை, எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர்,மேட்டூர் ஆகிய பகுதிகளில் இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடக்காமல் தடுக்கவும், இயற்கை இடர்பாடுகளில் சிக்கும் பொது மக்களை காப்பாற்றவும், அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகள் இரவு நேரங்களில் முழு ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று மார்ச்.02 இரவு பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்கள்.
News March 2, 2025
சேலம் ரயில் பயணிகளின் கவனத்திற்கு!

கோவை, ஈரோடு, சேலம் வழியே இயக்கப்படும் ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் தினசரி ரயில் (13351, 13352) இருமார்க்கத்திலும் ஒடிஷா மாநிலம், நோர்லா ரயில் நிலையத்தில் நின்றுச் செல்லும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. சோதனை அடிப்படையில் மறு அறிவிப்பு வரும் வரை 2 நிமிடங்கள் நின்றுச் செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.