News March 1, 2025
அரசுப் பள்ளிகளில் 25,000 மாணவர்களைச் சேர்க்க இலக்கு

சேலம் மாவட்டத்தில் கடந்தாண்டு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 22,000 குழந்தைகளை 1-ம் வகுப்பில் பெற்றோர்கள் ஆர்வமுடன் சேர்த்துள்ளனர்.அதேபோல் இந்தாண்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் சேர்க்கை வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.அரசுப் பள்ளியில் குழந்தைகளின் முன்னேற்றத்திற்காக தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் திட்டங்களை பெற்றோர்கள் உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்- சேலம் ஆட்சியர்.
Similar News
News July 8, 2025
இந்தியாவிலேயே தமிழகத்திற்கு தான் ஐ.நா விருது கிடைத்துள்ளது!

“இந்திய மருத்துவத்துறை வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஒரு துறைக்கு ஐ.நா. விருது கிடைக்கப் பெற்றுள்ளது
தமிழகத்திற்கு தான். இந்தியா முழுவதும் விபத்தில் சிக்கும் மக்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக அடித்தளமிட்டவர் தமிழக முதலமைச்சர் தான்” என சேலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு!
News July 7, 2025
சேலம் மாவட்ட விவசாயிகளின் கவனத்திற்கு!

சேலம் மாவட்ட விவசாயிகள் விளைபொருட்களை விற்க ஒவ்வொரு வட்டாரத்திலும் பொது சேகரிப்பு மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக, மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி தெரிவித்துள்ளார். கூடுதல் விவரங்களுக்கு தங்கள் அருகில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையோ அல்லது சேலம் உத்தமசோழபுரத்தில் அமைந்துள்ள சேலம் விற்பனைக் குழு தலைமை அலுவலகத்தையோ தொடர்பு கொள்ளலாம்.
News July 7, 2025
சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்!

சேலம் மாநகரில் இன்று (ஜூலை 07) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. ஊரகம், சங்ககிரி, ஆத்தூர், மேட்டூர், வாழப்பாடி ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.