News March 1, 2025
பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவன்

உ.பி.யில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை நிர்வாணமாக்கி, கணவன், குடும்பத்தினர் பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். கணவனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக அளித்ததாகவும், குழந்தை பெற்றபிறகு ரூ.10 லட்சம், கார் கேட்டு கொடுமைப்படுத்தி, இயற்கைக்கு மாறான உறவுக்கு கட்டாயப்படுத்துவதாகவும் பெண் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, கணவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
Similar News
News March 2, 2025
தூக்கத்திலேயே உயிரிழந்த 5 பேர்

மரணம் எப்படி வருமென்று யாருக்கும் தெரியாது. ஆனால், சில மரணங்கள் மிகவும் துயரம் தருபவை. பஞ்சாபில், தரன் தரன் மாவட்டத்தில், ஒரு குக்கிராமத்தில், 3 டீன் ஏஜ் பிள்ளைகளுடன் உறங்கிக் கொண்டிருந்தனர் கோபிந்தா சிங்- அம்ரித் தம்பதி. அதிகாலை 4:30 மணி அளவில், பழுதடைந்த மேற்கூரை மீது வைக்கப்பட்டிருந்த பாரம் தாங்காமல், திடீரென கூரை இடிந்து விழுந்ததில் மொத்த குடும்பமும் பலியாகியுள்ளனர். சாவு இப்படியா வரணும்?
News March 2, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச்.2) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டுமே இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
News March 2, 2025
8 மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி – மின்னலுடன் மழை

இரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் பட்டியலை IMD வெளியிட்டுள்ளது. அதில், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இரவு 1 மணி வரை இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பிருப்பதாக முன்னறிவித்துள்ளது. இதேபோல், நெல்லை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனவும் IMD குறிப்பிட்டுள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்கிறதா?