News March 1, 2025
கூட்டு சேர்ந்த அமெரிக்கா – ரஷ்யா

உலக அரங்கில் பரம எதிரிகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஒரே அணியில் நிற்பது அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாகியிருக்கிறது. ஜோ பைடன் அமெரிக்க அதிபராக இருந்த வரை, ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு பொருளுதவி செய்து வந்தார். தற்போது, பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், இனி பொருளுதவி செய்ய முடியாது என்று சொல்லி போரை நிறுத்த சொல்கிறார். இதன்மூலம், அமெரிக்கா மறைமுகமாக ரஷ்யாவின் பக்கம் நிற்கிறது.
Similar News
News March 1, 2025
போதிய வாய்ப்பில்லை…. ஜோதிகா வருத்தம்

குழந்தை பெற்ற பின் தனக்கு படங்களில் நடிக்க போதிய வாய்ப்பு கிடைக்கவில்லை என ஜோதிகா வருத்தம் தெரிவித்துள்ளார். சூர்யாவை திருமணம் செய்தபின் நடிப்பதை குறைத்து கொண்ட அவர், அண்மைக்காலமாக மீண்டும் நடித்து வருகிறார். இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள ஜாேதிகா, பாலசந்தர் போன்று பெண்களை மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குநர்கள் தற்போது இல்லை என்று வருத்தம் தெரிவித்தார்.
News March 1, 2025
சனிப் பெயர்ச்சி: ஏழரை சனியில் சிக்கப்போகும் ராசிகள்

2025 சனிப்பெயர்ச்சியால் ஏழரை சனியில் சிக்கப் போகும் ராசிகள், மீளப் போகும் ராசிகள் குறித்து ஜோதிடர்கள் கணித்துள்ளனர். அதை பார்க்கலாம். *மீன ராசி – ஜென்ம சனி (சனியின் உக்கிரமான பகுதி) *கும்ப ராசி – பாத சனி (சனியின் கடைசி பகுதி) *மேஷ ராசி – விரய சனி (ஏழரை சனி தொடக்கம்) *சிம்ம ராசி – அஷ்டம சனி *மகர ராசி – ஏழரை சனியிலிருந்து விடுபடல் *கடக ராசி – அஷ்டம சனியிலிருந்து விடுபடல்.
News March 1, 2025
5 பேர் கொலை வழக்கு: கைதான இளைஞர் பரபரப்பு வாக்குமூலம்

கேரளாவில் 5 பேரை கொன்ற இளைஞர் அளித்த வாக்குமூலம் வெளியாகியுள்ளது. ரூ.65 லட்சம் கடன் இருந்ததால், முதலில் தாய், சகோதரருடன் தற்கொலை செய்ய இருந்ததாகவும், தாய் சம்மதிக்காததால் அவரையும், சகோதரரையும் கொலை செய்ய முயன்றதாகவும், இதில் சகோதரர் மட்டும் இறந்ததாகவும், பின்னர் தாம் இல்லாமல் காதலி இருக்க மாட்டார் என கூறி, அவரையும், அலட்சியம் செய்த பாட்டி உள்ளிட்ட 3 உறவினர்களையும் கொன்றதாக கூறியுள்ளார்.