News March 1, 2025
எம் சாண்ட் விலை கடும் உயர்வு

கட்டுமான பணிக்கு அத்தியாவசிய தேவையாக உள்ள எம் சாண்ட் விலையை, குவாரி உரிமையாளர்கள் உயர்த்தியுள்ளதால் TN முழுவதும் கட்டுமான பணிகள் முடங்கியுள்ளன. கடந்த ஜனவரி மாதம் கரூர், திருச்சி உள்ளிட்ட சில மாவட்டங்களில் எம் சாண்ட் விலை உயர்த்தப்பட்டபோதே, கட்டுமான துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர். தற்போது TN முழுவதும் கட்டுமானத்திற்கான 1 யூனிட் எம் சாண்ட் விலை ₹3,500ல் இருந்து ₹4,500ஆக உயர்ந்துள்ளது.
Similar News
News March 1, 2025
பிப்ரவரி GST வரி வருவாய் ₹1.84 லட்சம் கோடி

கடந்த பிப்ரவரி மாதத்தில் GST வரி வருவாய் 9.1% அதிகரித்துள்ளதாக, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கையில், மத்திய GST ₹35,204 கோடி, மாநில GST ₹43,704 கோடி, ஒருங்கிணைந்த GST ₹90,870 கோடி மற்றும் கூடுதல் வரி ₹13,868 கோடி என மொத்தம் ₹1.84 லட்சம் கோடி வசூலாகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், நடப்பாண்டில் GST வரி வருவாய் 11% அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 1, 2025
அரையிறுதிக்கு முன்னேறியது தெ.ஆப்.,

ICC Champions Trophy: இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் தெ.ஆப்., அபார வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய தெ.ஆப்., 29.1 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. தற்போது அரையிறுதியில் இந்தியா., ஆஸி., நியூசி., மற்றும் தெ.ஆப்., அணிகள் மோதுகின்றன.
News March 1, 2025
+2 பொதுத் தேர்விற்கு தயாராகும் பள்ளிகள்!

தமிழகத்தில் மார்ச் 3ம் தேதி (திங்கட்கிழமை) +2 பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள மேஜைகள் சுத்தம் செய்வது, மாணவர்களுக்கு தேர்வறைகள் ஒதுக்குவது, பதிவு எண் எழுதும் பணி உள்ளிட்டவை நடந்து வருகிறது. இதனிடையே மாணவர்கள் தேர்வுக்கு தயாராவதில் எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருக்க மின் தடை ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மின் வாரியம் ஈடுபட்டுள்ளது.