News March 1, 2025
இந்தியை தேசிய மொழி என்ற அமைச்சர்

இந்தி மொழியை தேசிய மொழி என்று மத்திய கலாசாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் பேசியிருப்பது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் இந்தி திணிப்பு தொடர்பான பிரச்னைகள் வெடித்துக் கொண்டிருக்கும் வேளையில், ”தேசிய மொழியான இந்தி, முழு நாட்டையும் ஒற்றுமையின் நூலில் இணைக்கும்” என்று அவர் பேசியிருக்கிறார். இதுகுறித்த உங்களது கருத்து என்ன?
Similar News
News March 1, 2025
காவல்துறை செய்தது தவறு: அண்ணாமலை

சீமான் விவகாரத்தில் போலீசார் நடந்து கொண்ட முறை சரியல்ல என அண்ணாமலை குற்றஞ்சாட்டியுள்ளார். சீமானிடமே நேரில் சம்மனை வழங்கியிருக்கலாம் என கூறிய அவர், தேடப்படும் குற்றவாளியின் வீட்டில்தான் சம்மன் ஒட்டுவார்கள் என்றார். மேலும், இந்த வழக்கில் ஆரம்பத்தில் இருந்தே போலீசார் நடந்துகொண்ட விதம் சரியில்லை என்று விமர்சித்த அவர், காவல்துறை அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாகவும் சாடியுள்ளார்.
News March 1, 2025
யார் பெஸ்ட்? அஜித்- விஜய் ரசிகர்களிடையே மோதல்

அஜித் – விஜய் ரசிகர்களிடையே சோஷியல் மீடியாக்களில் சண்டை பற்றி எரிகிறது. நேற்று வெளியான ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தின் டீசர் முழுவதும் மாஸான சம்பவங்கள் இருந்தாலும், சின்ன வயது அஜித்தின் கெட்டப் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதையும், கோட் படத்தில் AI தொழில்நுட்பம் மூலம் உருவான சின்ன வயது விஜய்யும் ஒப்பிட்டு, யார் பெஸ்ட்? என இருவரின் ரசிகர்களும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர்.
News March 1, 2025
பெண்ணை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்த கணவன்

உ.பி.யில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண்ணை நிர்வாணமாக்கி, கணவன், குடும்பத்தினர் பாலியல் சித்ரவதை செய்துள்ளனர். கணவனுக்கு ரூ.50 லட்சம் ரொக்கம் வரதட்சணையாக அளித்ததாகவும், குழந்தை பெற்றபிறகு ரூ.10 லட்சம், கார் கேட்டு கொடுமைப்படுத்தி, இயற்கைக்கு மாறான உறவுக்கு கட்டாயப்படுத்துவதாகவும் பெண் புகார் கூறியுள்ளார். இதையடுத்து, கணவன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.