News March 1, 2025

மகனை துடிதுடிக்க கொன்ற தாய்.. கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

image

பூந்தமல்லியில் 6 வயது மகனை கொடூரமாக கொன்று கால்வாயில் வீசிய வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018இல் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக மீனாட்சி என்ற பெண் தனது மகன் ஜெயகாந்தை தலையணையால் அழுத்தி, கொலை செய்து உடலை எரித்து வீட்டின் அருகில் உள்ள கால்வாயில் வீசினார். நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு மீனாட்சி போலீசாரின் காலில் விழுந்து கதறி அழுதார். இப்படியும் ஒரு தாயா?

Similar News

News March 1, 2025

+2 Exam.. மாணவர்களுக்கு எச்சரிக்கை

image

நாளை மறுநாள் +2 பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு தேர்வுத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மாணவர்கள் யாரும் முறைகேட்டில் ஈடுபட வேண்டாம். மீறி விடைத்தாள் பரிமாற்றம், ஆள்மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால், 1 – 5 ஆண்டுகள் வரை தேர்வு எழுத தடை அல்லது நிரந்தரமாக படிக்கத்தடை விதிக்கப்படும். இதன் காரணமாக மாணவர்களின் எதிர்காலமே பாதிக்கப்படலாம் என அலர்ட் கொடுத்துள்ளது.

News March 1, 2025

SAவுக்கு 180 ரன்கள் இலக்கு

image

CT தொடரில், தென்னாப்பிரிக்காவுக்கு 180 ரன்களை இலக்காக நிர்ணயித்தது இங்கிலாந்து. கராச்சி மைதானத்தில் டாஸ் வென்ற ENG முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களமிறங்கியது. ஆனால் SA வீரர்கள் பந்துவீச்சை சமாளிக்க முடியாத ENG அணியினர் 38.2 ஓவர்களில் 179 ரன்களுக்கு ஆல் அவுட்டாகினர். அதிகபட்சமாக ரூட் 37, ஆர்ச்சர் 25 ரன்கள் எடுத்தனர். SA தரப்பில் ஜான்சென், மல்டர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

News March 1, 2025

ஸ்ரேயா கோஷல் X தள பக்கம் முடக்கம்

image

பிரபல பின்னணி பாடகி ஸ்ரேயா கோஷலின் X தள பக்கம் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பிப்ரவரி 13ஆம் தேதி முதலே தனது X தள பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெயரிலுள்ள அந்த கணக்கில் வரும் எந்த செய்தியையும் நம்ப வேண்டாம் எனவும் ரசிகர்களுக்கு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

error: Content is protected !!