News March 1, 2025
மாசி மகம் தெப்பத் திருவிழா நாளை ஆரம்பம்

திவ்ய தேசங்களில் 47-வது திவ்ய தேசமாக கருதப்படும், மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் நாளை 2-ந் தேதி கொடியேற்றத்துடன் மாசி மகம் தெப்பத்திருவிழா தொடங்குகிறது. நிகழ்ச்சியின் தொடக்கமாக இன்று மாலை விசுவசேனர் புறப்பாடு, வாஸ்து சாந்தி நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நாளை 2-ந் தேதி காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கொடியேற்றம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து இரவில் அன்ன வாகனத்தில் ராஜாங்க சேவை நடைபெறும்.
Similar News
News April 30, 2025
திருமண ஏக்கத்தில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

அவனியாபுரம் அயன்பாப்பாகுடியை சேர்ந்தவர் அழகர் மகன் முனியசாமி(35). திருமணம் ஆகாத இவருக்கு குடிப்பழக்கம் இருந்தது. திருமணம் ஆகாததை நினைத்து அடிக்கடி புலம்பி கொண்டிருந்துள்ளார். இதனால் 2 முறை தற்கொலைக்கு முயன்று காப்பாற்றி உள்ளனர். இந்நிலையில், வீட்டின் பின்புறம் உள்ள மாட்டு கொட்டகையில், மாடு கட்டும் கயிற்றால் தூக்குபோட்டு நேற்று தற்கொலை செய்து கொண்டார்.
News April 29, 2025
மதுரையில் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

மதுரை மாநகரில் பணியாற்றி வரும் 4 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம் செய்து கமிஷனர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார் அதன்படி மதிச்சியம் இன்ஸ்பெக்டர் வேதவள்ளி மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்திற்கும் மதுரை டவுன் மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய விமலா அரசு ஆஸ்பத்திரிக்கும் இதுபோல் விருதுநகர் மாவட்ட இன்ஸ்பெக்டர் செல்வி கூடல் புதூருக்கும் இங்கு பணியாற்றிய பாலமுருகன் மதிச்சியத்திற்கும் மாற்றப்பட்டனர்.
News April 29, 2025
மதுரை பெண்களிடம் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

மதுரை மக்களே அனைத்து பெண்களும் மகளிர் காவல் துறை எண்களை தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
திருமங்கலம் -04549-280361
தி.குன்றம்-04182-220620
உசிலம்பட்டி -04552-253510
மேலூர் -0452-2487725
சமயநல்லூர் -0452-24635360
மதுரை நகர் -0452-2330031
திலகர் திடல் -452-2533247
தல்லாக்குளம்-0452 – 2538015
இந்த எண்களை தெரிந்த அனைத்து பெண்களுக்கும் SHARE செய்து சேவ் பண்ண சொல்லுங்க.