News March 1, 2025
கரூர் பைக் தீப்பிடித்து – முதியவர் பலி

கரூர் மாவட்டம் புகலூர் தாலுக்கா துக்கச்சி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 66. இவர் கடந்த 22 ஆம் தேதி தனது பைக்கில் பெட்ரோல் நிரப்பியபோது திடீரென பைக்கில் தீப்பிடித்ததில் பழனிச்சாமி மீது 45% தீப்பிடித்து கொடுமுடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று கரூர் அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தென்னிலை போலீசார் நேற்று வழக்குப்பதிந்தனர்.
Similar News
News November 12, 2025
கரூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

கரூரில் பிரதம மந்திரியின் கௌரவ நிதி திட்டத்தின்கீழ், (PM-KISAN) தனித்துவ அடையாள அட்டை பெற்று பி.எம்.கிஷான் 21வது தவணை தொகை பெற முன்னோர்கள் பெயரில் பட்டா உள்ள விவசாயிகள் தங்களது பெயரில் பட்டா மாறுதல் பெற்று, அதனுடன் ஆதார் எண்ணை இணைத்து பதிவு செய்து தனித்துவ விவசாய அடையாள எண் பெற்றால் மட்டுமே பி.எம்.கிஷான் அடுத்த தவணை தொகை தொடர்ந்து கிடைக்கும். என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
News November 12, 2025
கரூர்: வீடு கட்ட அரசு தரும் SUPER OFFER!

சொந்த வீடு கனவை நிறைவேற்ற மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதில் மானியத்துடன் கடன் வழங்கப்படும். சொந்த வீடு இல்லாத, ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருப்பவர்கள் pmay-urban.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் டிச.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, வங்கி கணக்கு போன்ற ஆவணங்களை இதனுடன் சமர்பிக்க வேண்டும். இந்த தகவலை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News November 12, 2025
கரூர்: 12th போதும் ரயில்வே வேலை! APPLY NOW

கரூர் மக்களே, 12th தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? ரயில்வேயில் வேலை செய்ய ஆசையா? இதோ சூப்பர் அறிவிப்பு வந்துள்ளது. டிக்கெட் கிளார்க் , ரயில் கிளார்க் , எழுத்தர் உள்ளிட்ட பதிவிகளுக்கு 3,058 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு சம்பளம் ரூ.21,700 முதல் வழங்கப்படும். இது குறித்து மேலும் விபரம் மற்றும் விண்ணப்பிக்க <


