News March 1, 2025
டிரம்ப் ஜெலன்ஸ்கி கடும் மோதல்

அமெரிக்கா சென்றிருந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை டிரம்ப் கடுமையாக தாக்கி பேசியதால், ஜெலன்ஸ்கி பாதியிலேயே வெளியேறினார். நீங்கள் 3ஆம் உலகப் போரைத் தொடங்குவது போல செயல்பட்டு, பல லட்சம் மக்களின் உயிரோடு விளையாடிக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் கடுமையாக சாடினார். இதனால், ஆத்திரமடைந்த ஜெலன்ஸ்கி, டிரம்பின் விருந்தை புறக்கணித்து வெளியேறினார்.
Similar News
News March 1, 2025
6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

நெல்லை, தென்காசி, குமரி, விருதுநகர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் (MET) தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாகவும், இதனால் தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் ஓரிரு இடங்களில் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கணித்துள்ளது.
News March 1, 2025
பிறந்தநாளில் உறுதிமொழி எடுத்த CM ஸ்டாலின்

CM ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என 3 முறை முழக்கமிட்டு திமுகவினர் உறுதிமொழி எடுத்தனர். தமிழ்நாட்டின் நலனையும், எதிர்காலத்தையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுத்தர மாட்டோம் என்பதே ஒரே இலக்கு, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம், மாநிலத்தின் உரிமைகளுக்காக ஒன்றுபட்டு போராடுவோம் எனவும் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
News March 1, 2025
டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது: ஜெலென்ஸ்கி

டிரம்பிடம் மன்னிப்பு கேட்க முடியாது என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். டிரம்புடன் மோதல் ஏற்பட்டாலும் அமெரிக்காவுடனான உறவைக் காப்பாற்ற முடியும் என்று அவர் நம்புகிறார். அமெரிக்கா சென்ற ஜெலன்ஸ்கியை டிரம்ப் பொது வெளியில் சாடியதால், அவர் விருந்தை புறக்கணித்து வெளியேறினார். இதற்கு டிரம்பிடம் ஜெலன்ஸ்கி மன்னிப்பு கேட்க வேண்டுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வலியுறுத்தியிருந்தார்.