News March 1, 2025

விருதுநகரில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

image

விருதுநகா், மத்திய சேனையைச் சேர்ந்த பட்டாசுத் தொழிலாளிகளான வெள்ளையன், மகேஸ்வரி தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். இதில் பிரவீன்(5) நேற்று மாலை விளையாட சென்றவா் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என தேடிய போது, மற்றொரு வீட்டு தகரக் கொட்டகையின் மேலே செல்லும் மின் கம்பியில் இறந்த நிலையில் கிடந்தாா். இதையடுத்து, ஆமத்தூா் போலீஸாா் சிறுவனின் உடலை மீட்டு விருதுநகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்

Similar News

News April 8, 2026

விருதுநகர்: டிராக்டர் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் பலி.!

image

நரிக்குடி அருகே உள்ள ஒட்டங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (28). இவர் அப்பகுதியில் நேற்று டிராக்டரில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென தவறி விழுந்துள்ளார். இதில் லட்சுமணனின் கால் ரொட்டேட்டர் எந்திரத்திற்குள் சிக்கியது. இதில் படுகாயமடைந்த லட்சுமணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வீரசோழன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.! .

image

வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், மருத்துவர்கள் மது குடிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் வீட்டில் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

News April 8, 2026

விருதுநகர்: விஷம் குடித்து இளைஞர் தற்கொலை.! .

image

வத்திராயிருப்பு அருகே ரெங்கபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தால் உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததால், மருத்துவர்கள் மது குடிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளனர். இதனால் விரக்தியில் இருந்த மணிகண்டன் வீட்டில் பூச்சி கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்

error: Content is protected !!